Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, January 21, 2013

எது சுகம்?

எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வந்தது. காரணம் பெரியதாக ஒன்றும் இல்லை. உருளை கிழங்கை தீய்ச்சுட்டோம். அதுக்கு காரணம் நீ நான் ன்னு ஒரு மானங்கெட்ட சண்டை. அந்த சண்டையை சாக்கா வெச்சு இத்தனை நாள் என் மேல் இருந்த குறையை அவங்களும் அவங்க மேல இருந்த குறையை நானும் சொல்லிக்கிட்டோம். அப்ப என் கணவரை பார்க்கத்தான்  பாவமா இருந்துச்சு. அவர் அம்மா பையன். ஆனா அதே சமயம்  நான்னா உயிர். ரெண்டு பேருக்கும் நடுவுல அவர் தவிச்சதால தான்,  மனசு கேக்காம மாமியாரும் மருமகளும் சண்டைய முடிச்சுகிட்டோம்.

நான் ஒரு இடத்துல மனத்தாங்கல் வந்துச்சுன்னா பெரும்பாலும் உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பிடுவேன். அப்ப தான் பிரச்சனையை பெருசாகாம இருக்கும். நானும் தனிமைல என்கிட்டே  குறை இருக்கா, அதுக்கு என்ன காரணம், எப்படி சரி பண்ணிக்கறதுன்னு யோசிச்சு சரி பண்ணிக்குவேன். அதனால  'நான் எங்க வீட்டுக்கு போய் ஒரு ரெண்டு நாளைக்கு தங்கிட்டு வரேன்னு' சொல்லிட்டு வந்துட்டேன். சண்டை போட்டுட்டு கோவிச்சுகிட்டு வராம சமாதானம் ஆகி, என் கணவரோட தான் வந்தேன். அதனால எங்க அம்மா அப்பா ஒண்ணும்  சொல்லல.

எங்க வீட்டுக்கு வந்து நான் செஞ்ச முதல் காரியம் குளிச்சுட்டு ரெய்கி தியானம் பண்ணினது தான். உண்மையிலேயே மனசுல இருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வெளிய போட்ட மாதிரி இருந்துச்சு. தொடர்ந்து ரெண்டு நாளும் காலைல சக்தியூட்டும் தியானமும், சாயந்திரம் சக்ரா  தியானமும்  செஞ்சேன். சண்டை போட்ட நாளுக்கு முன்னாடி வரை யாராவது அந்த ரெண்டு கேள்வியையும் கேட்டா உடனே  ஏதோ துக்கம் தொண்டையை அடைச்ச மாதிரி அழுகை வர்ற மாதிரி இருக்கும். ஆனா தியானம் செஞ்சு மனசை சரி செஞ்சுகிட்டதால அந்த ஸ்ட்ரெஸ் போய்டுச்சு.

மூணாவது நாள் அவங்க வீட்டுக்கு போனதும் அவங்க எப்பவும் போல பேசினாங்க . நானும் சரி ஆகிட்டேன். அன்றிலிருந்து தியானம் செய்ய தவறவே இல்ல. இந்த சமயத்துல எங்க அப்பா 'திருச்சில மூச்சு பயிற்சி கிளாஸ் நடத்தறாங்க. நீயும் கலந்துக்கறயா?ன்னு கேட்டார். என் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரன் இதை பத்தி பலவிதமா சொல்லி இருக்கறதால என்னன்னு தான் தெரிஞ்சுக்கலாம்னு சரின்னு  சொல்லிட்டேன். போன சனிக்கிழமை காலைல 4 மணிக்கு நானும் அப்பாவும் பஸ்ல கிளம்பினோம். ஸ்பாட்டுக்கு போக 9.30 ஆகிடுச்சு.

வகுப்பெடுத்தவர் ஒரு புத்த பிக்கு. வகுப்பில் என்ன நடத்தினாங்கன்னு கேட்டா 'ஒண்ணும் நடத்தல. ஒரு நாள் முழுக்க 31 விதமா அவங்கவங்க மூச்சை கவனிச்சோம்'ன்னு தான் சொல்லணும். ஆனா அதனோட பலன் அற்புதம். நினைச்சதெல்லாம் நடந்துச்சு.

வகுப்பு முடிஞ்சதும் பஸ்ல இடம் கிடைக்கணும்னு நினைச்சேன். (ஏன்னா அது பொங்கல் லீவ்). பயணம் முழுக்க பஸ் பெரும்பாலும் காலியாகவே வந்துச்சு.

சமயபுரம் டர்னிங்ல பஸ் நிரம்புச்சு. யாராவது குண்டா வந்து உக்காந்தா அசைய முடியாதேன்னு நினைச்சு கவலைப்பட்டேன். நிறைய பேர் ஏறினாங்க. நான் என் போலவே ஒரு ஒல்லி பெண் ஏறியதை பார்த்தேன் அந்த பெண் வந்து உக்காந்தா பரவாயில்லையே ன்னு நினைச்சேன். நிறைய சீட்  காலியா இருந்தாலும் கரெக்டா அந்த பொண்ணே வந்து என் பக்கத்து சீட்லயே உக்காந்துச்சு.

காத்து சேராதுன்னு எனக்கு முன்னாடி சீட் காரங்க ஜன்னல சாத்தணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துச்சு.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி நைட்டு 10.30. முகம் கழுவல, வைப் பேப்பர் கொண்டு போகல முகம் எப்படி இருக்குமோன்னு கண்ணாடிய பார்த்தா  சர்ப்ரைஸ்!!! காலைல வச்ச திருநீறு  கூட கலையல. முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. முகத்துல கொஞ்சம் கூட டயர்ட் இல்லையேன்னு அம்மாவுக்கு கூட ஆச்சரியம்.

 இத்தனை வருஷமா கவனமில்லாம அனிச்சையா  செஞ்சிட்டு இருந்த மூச்சு விடறதை ஒரே ஒரு நாள் கவனிச்சதுக்கே இவ்வளவு பலன். அதெப்படி மூச்சு விடறதுக்கும் இப்படி எல்லாம் நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?ன்னு கேக்கலாம். அதை ஒரு குரு மூலமா கேட்டீங்கன்னா உங்களுக்கும் நன்மை, நம்பிக்கை வரும். நான் இப்ப தான் எல்.கே.ஜி. எனக்கு சரியா சொல்ல வரல. எங்கயாச்சும் இது போல வகுப்பு நடந்துச்சுன்னா நீங்களும் கலந்துக்கோங்க. அதை அனுபவிச்சாதான் அருமை தெரியும். அப்படி எதுவும் அற்புதம் நடக்காட்டியும் கூட, உடம்பு அசையாம எதை பத்தியும் நினைக்காம மூச்சை பத்தி மட்டும் உங்க கவனம் இருக்கறது ஆனந்தம். எந்திரிக்கவே மனசு வராது. நல்லா இருக்கும். வேற எந்த வேலை செஞ்சுட்டு இருந்தாலும் உங்க கவனம் உங்க மூச்சுக்கே வரும். அது ஒரு வித சுகம்ங்க.

Thursday, January 17, 2013

என்னை பார்த்து ஏன் அந்த கேள்வி கேட்டாங்க?

 கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு நான்கு மாதம் கழித்து என்னை சந்திப்பவர்களில்  பெரும்பாலானோர் என்னை பார்த்து இரண்டு கேள்விகளில் ஒன்றை கட்டாயம் கேட்டார்கள்.

1. என்ன இது, இவ்வளவு இளைச்சு போய்ட்ட? (ஏற்கனவே நான் ஒல்லி என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்)
2. அட, எங்க போச்சு உன் கலர்? இப்படி கறுத்துப் போய்ட்ட? (நான் வெள்ளையாக இருந்தேன் என்பது அவர்கள் எண்ணம். நான் பளிச்சென்று இருந்தேன் என்பது என் எண்ணம் . என்னை நேரில் பார்த்தவர்கள் அறிவீர்கள்.)

எங்க போச்சு என் கலரும் உடம்பும்? கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு உப்புமா வேணும்மா... (நான் ஒரு உப்புமா பைத்தியம்) என்று கேட்ட சில நிமிஷங்களில் எனக்கான உப்புமா ரெடியாக இருக்கும். நான் ஒல்லியா இருக்கறதால எங்க அம்மா டெய்லி ஜூஸ் தருவாங்க. ( மென்னு சாப்பிட சோம்பேறித்தனம் ) . மானாட மயிலாட ப்ரோகிராம மிஸ் பண்ணினதே கிடையாது. விருப்பப்பட்ட கிளாஸ்ல சேர்ந்துக்குவேன். அந்த லைப் செமையா இருந்துச்சு.

 நான் எது செய்தாலும் அது பாராட்டப்படும் போது எனக்கு தன்னம்பிக்கை அதிகரிச்சுது. திட்டப்படும்போது கவலையை மனசுக்குள் கொண்டு போகாமல் என்ன காரணத்துக்காக திட்டப்படறேன்னு அனலைஸ் பண்ணிக்க முடிஞ்சுது. ரெகுலரா தியானம் பண்ணி மனசை ஒரு சமநிலையில வச்சுக்க முடிஞ்சுது. மனம் தெளிவா இருந்ததால முகமும் தெளிவா இருந்துச்சு. எல்லாம் ஒரு வட்டத்துல சரியா போயிட்டு இருந்துச்சு.


கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கான உப்புமாவை நானே செய்துகொள்ள வேண்டியிருந்தது. ஜூஸா  குடிக்காத, மென்னு சாப்பிடு, அதுதான் சத்துன்னு எங்க மாமியார் சொல்வாங்க. டிவி அவங்க இஷ்டத்துக்கு பார்த்துக்கட்டும், நாம புக் படிச்சுக்கலாம்ன்னு டிவி பார்க்கறதை விட்டுட்டேன். இந்த ஏரியால எந்த கிளாசும் கற்றுத்தருவது கிடையாது.  தியானம் செய்ய நேரம் இல்ல, சாமி என் இஷ்டத்துக்கு கும்பிட முடியல, பதிவு எழுத முடியல, டைரி எழுத மறந்தே போச்சு, அப்படி இப்படின்னு சில விரும்பாத மாறுதல்களும் நடந்துச்சு. எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு கொஞ்சம் கொஞ்சமா சுய இரக்கம்  தலைகாட்டத்  தொடங்கியது..

எங்க மாமியார் மாமனார் என்னை பொண்ணு மாதிரி நல்லா பாத்துக்கிட்டாலும் என்னை பாராட்டியதில்லை. ஏன்னா அவங்க பாராட்டற மாதிரி நான் நடந்துகிட்டதில்லை. நான் சமையல் வேலைக்கு ரொம்ப புதுசு. மாமியார்கிட்ட கத்துகிட்டு தான் சமைக்க ஆரம்பிச்சு இருக்கேன். இதுக்கு அவங்க என்னை திட்டாம இருக்கறதே பெருசு.

அவங்க திட்டற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு மாமனார், மாமியார், என் கணவர் இவங்க அன்புக்காகநானே பல விஷயங்கள்ல என்னை மாத்திக்கிட்டேன்.  நேரமா எழுந்திரிக்கறதுல  ஆரம்பிச்சு நைட் தூங்கற வரைக்கும் நான் செய்யற பல செயல்கள் நானா விருப்பப்பட்டு என்னை மாத்திக்கிட்டேன்.

மேலும், உடம்பு இளைச்சதுக்கு உடல் உழைப்பும், சரியான சாப்பிடாததும் காரணம்.  அம்மா சமையல் டேஸ்ட் வேற. மாமியார் சமையல் டேஸ்ட்  வேற. எனக்கோ சமைக்க தெரியாது. கடமைக்கு சாப்பிட்டேன். 

இந்த சமயத்துல அந்த ரெண்டு கேள்விகளும் அடிக்கடி கேட்கப்பட ஆரம்பிச்சுது. ஒரு பலசாலிய பார்த்து ஊரே 'என்ன இப்படி ஆகிட்டீங்க'ன்னு கேக்க ஆரம்பிச்சதும் அவன் பலம் போய்டுமே... அந்த கதையா நானும் நொந்து போக ஆரம்பிச்சேன். என் கணவருக்கு என் கலரும் என்னிடம் பிடிச்ச விஷயம். ஒரு கட்டத்தில் அவரே 'என்ன இவ்ளோ கருத்துட்ட ?' என்று கேட்க ஆரம்பிச்சார். பயங்கர மனஅழுத்தம். என் கணவர் கிட்ட 'என்னை ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போங்க. எனக்கு ஸ்ட்ரெஸ் ரிலீவ் ஆகணும்' ன்னு கேட்டேன். சரின்னு சொல்லி இருந்தார்.

அந்த சமயத்தில் தான் எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வந்தது.

(தொடரும்)