Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, December 22, 2013

இப்போது நான் பாதி கார்டியாலஜிஸ்ட்

போன மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு 1மணிக்கு போன்  வந்துச்சு. தூக்கக்கலக்கத்துடன் போன் பேசினேன். கனவா நிஜமான்னு தெரியாத நிலையில் வந்த அதிர்ச்சி தகவல் தூக்கத்தை துரத்திடுச்சு. என் அத்தை "கண்ணு... தைரியமா இரு... அப்பாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. ஹார்ட் அட்டாக்காம். எதுக்கும் ஒரு தடவை நேர்ல பார்த்துடு"ன்னு சொன்னாங்க. ஒண்ணுமே புரியாம திணறிட்டேன்.

 

 எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர்ற அளவு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மிதமான சாப்பாடு. தியான மாஸ்டர். கவலை இல்லாத வாழ்க்கை. ஒரு வேளை இது நிஜமில்லையோ.. அத்தை தப்பா போன் பண்ணிட்டாங்களோ... என்னென்னவோ தோணுச்சு . இது உண்மை தான்னு தெரிஞ்சதும் உடனே கணவருடன்  கிளம்பி ஹாஸ்பிடலுக்கு போனேன். (வழியெல்லாம் அழுதுகிட்டே தான் ). செக் போஸ்டில் நிறுத்திய போலீஸ்காரர் கூட ஆறுதல் சொல்லும் அளவுக்கு அழுதேன். ஒரே பொண்ணு... அதுவும் அப்பா செல்லம் இல்லையா..

 ஹாஸ்பிடலில் "அப்பா ஐ.சி.யூ ல இருக்காங்க. நல்லா தான் இருக்காரு. ஒண்ணும்  பயந்துக்காத. "ன்னு அம்மா சொன்னாங்க. உள்ளே எட்டி பார்த்தப்ப அப்பா நல்லா இருக்கேன் கவலைபடாதன்னு சிக்னல் பண்ணினார். நர்ஸ் கிட்ட கேட்டப்ப அவங்களும் பாசிடிவ்  பதில் தந்தாங்க. அதுக்கப்பறம் தான் மனசு நிம்மதி ஆச்சு.

விஷயம் என்னன்னா காலைல உருளைக்கிழங்கு குழம்பு (சார் சைவம்) சாப்பிட்டுட்டு மதியம் பவானி வரைக்கும் பைக்கிலேயே போய்  இருக்கிறார். வழியிலேயே வலி வந்துடுச்சு. சரி... வாய்வு தொல்லையா இருக்கும்ன்னு அவர் பிரெண்ட் வீட்டுலேயே ரெஸ்ட் எடுத்திருக்கார். அட்டாக் வந்தா ஒண்ணா வாந்தி இல்லாட்டி பேதி வருமாமே... இவருக்கு பேதி ஆயிருக்கு. சுத்தமா டயர்ட் ஆகி அங்கேயே ஒரு மணிநேரம் படுத்து பார்த்திருக்கார்.  ரெஸ்ட்லெஸ் நிலையே தொடரவும், வீட்டுக்கு போனால் போதும்ன்னு  திரும்ப வண்டியிலேயே சமாளிச்சு ஓட்டிட்டு வந்திருக்கார். வீட்டுக்கு வந்தும், செமையா வேர்த்திருந்த அவருடைய சட்டை பனியனை கழட்டி எவ்வளவு ஈரம்னு வேற அம்மா கிட்ட காமிச்சிருக்கார் .

அலோபதி சிகிச்சையை பொதுவா அப்பா விரும்ப மாட்டார். அவரோட ஒரு ஸ்டுடன்ட், அக்குபஞ்சர் டாக்டரா  இருக்காங்க. அந்த நேரம் அந்த அம்மா வந்திருந்தாங்க. அவங்களும் என்னத்த டயக்னைஸ் பண்ணினாங்களோ... இது வாய்வு தான்னு ஒரு மணிநேரம் என்னென்னமோ செஞ்சுருக்காங்க. அவங்க போனதுக்கப்பறமும் ரெண்டு கையிலயும் பயங்கர வலி ப்ளஸ் நடு நெஞ்சுல (இடது பக்கம்னு சொல்லல) வலி தொடர்ந்து இருக்கவும், அம்மா கட்டாயப்படுத்தி ஈரோடு ட்ரஸ்ட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க. அங்க போனதும் ECG  எடுத்து பார்த்துட்டு டாக்டர் "இது ஹார்ட் அட்டாக் தான். அதுவும் மாஸிவ் அட்டாக்." ன்னு கன்பார்ம் பண்ணி அட்மிட் பண்ணிட்டாரு. அட்டாக் வந்து எட்டு மணி நேரத்துக்கு பிறகு தான் அப்பா ஹாஸ்பிடல் போய் இருக்கார். அதுக்கப்பறம் ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் விஷயம் தெரிஞ்சுருக்கு.

அதுக்கப்பறம் திங்கள் நைட்டு, அப்பாக்கு ஆஞ்சியோகிராம் பண்ணி பார்க்கணும். அவருக்கு அடைப்பு இருக்கும்னு தோணுதுன்னு டாக்டர் சொன்னார். அப்பாவோட ஹோமியோபதி ஸ்டுடென்ட் ஒருத்தர் "ஆஞ்சியோ  மட்டும் பண்ணவே பண்ணாதீங்க. அதுல யூஸ் பண்ற டை, கிட்னில ஸ்டோர் ஆகி கிட்னி ரெண்டு வருஷத்துல வீக் ஆகிடும்" ன்னு பயமுறுத்தினாங்க. ஒருத்தர் இந்த முருகன் டாக்டர் தான்  ஈரோடுல ஹார்ட்டுக்கு பெஸ்ட் டாக்டர்ன்னு சொல்றார். இன்னொருத்தர் ஈரோட்ல பார்க்கறது வேஸ்ட். உடனே கோயம்பத்தூர் கூட்டிட்டு போங்கன்னு சொல்றார். இதுல இன்னொரு ட்விஸ்ட் வேற. இந்த டாக்டரும் ஆஞ்சியோ  பண்றதா இருந்தா நான் ஏற்கனவே பணம் தின்னிகள் பதிவுல குறிப்பிட்ட அந்த ஹாஸ்பிடல்ல தான் பண்ணுவாராம். எனக்கு, அப்பாவுக்கு எல்லாம் ஏற்கனவே அந்த ஹாஸ்பிடல் அலர்ஜி. தலைவலி காய்ச்சல் தவிர பெருசா எதையும் பார்த்திடாத எங்க குடும்பத்துக்கு இதுல எதை நம்பறது எதை விடறது எதை செய்யறது எதை செய்யக்கூடாதுன்னு ஒன்னும் புரியல.


அப்பாவுக்கு வேற மெது மெதுவா நுரையீரல், கிட்னி எல்லாம் பிரச்சனையை பண்ண ஆரம்பிச்சுடுச்சு. நுரையீரல் ல சளியும், கிட்னி ல கிராட்டின் லெவலும் அதிகம் ஆகிடுச்சு. பல்ஸ்  குறைய ஆரம்பிச்சுடுச்சு. இதெல்லாம் சரியானால் தான் ஆஞ்சியோ  பண்ண முடியுமாம். (இந்த பதிவுல நிறைய டெக்னிகல் வார்த்தைகள் உபயோகப்படுத்தி இருக்கேன். பழகிக்கோங்க. நான் பழகல ?) ஆனா எங்களுக்கு என்ன ஆச்சரியம்னா அப்பா கொஞ்சம் கூட அப்நார்மலா தெரியல. எப்பவும் போலவே இருந்தார். வீட்டுக்கு போலாம் எதுக்கு இன்னும் இங்க இருக்கோம்ன்னு கேட்டுகிட்டே இருந்தார். அவருக்கு தெரிஞ்சா பயந்துடுவாரோன்னு வாய்வு தொல்லைக்கும் சளிக்கும் தான் சிகிச்சைன்னு சொல்லியே சமாளிச்சோம். டாக்டர்கள் பொய் சொல்றாங்களோன்னு கூட தோணுச்சு. 

ஒரு அஞ்சு நாள் ஐ.சி.யூ விலேயே காத்திருந்த பிறகு டாக்டர் "நீங்க கோயமுத்தூரே கூட்டிட்டு போங்க. இங்க பல்ஸ ஏத்தறதுக்கு மெஷினரிஸ் இல்ல"ன்னு ஆம்புலன்ஸ் ல அனுப்பி வெச்சுட்டார்.

ஸோ ,
மருந்து செலவு இல்லாமல் ஹாஸ்பிடல் செலவு 15000.
ஆம்புலன்ஸ் செலவு ஈரோடு டு கோவை                     5000

 பெரிய பதிவா போய்டுச்சு. அதனால வழக்கம் போல 
(தொடரும்)

Monday, September 2, 2013

தயிராக மாற்ற முடியாத பால் எது?

அமலா பால்னு சொல்லி அடி வாங்காதீங்க. உங்களுக்காக சில கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்ல முடிகிறதா பாருங்கள்.

1. முன்னால், பின்னால், பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை எது?

2. நடக்க தெரியாத பறவைகள் எவை என்று தெரியுமா உங்களுக்கு?

3. புற்றுநோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் எது தெரியுமா?

4. தயிராக மாற்ற முடியாத பால் எது?

5. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம் எது?

6. சிங்கம் கர்ஜிப்பது எவ்வளவு தொலைவில் இருந்து கேட்கலாம்?

7. உலகின் மிகப்பெரிய பாம்பு எது? அது முட்டை இடுமா ?

8. ஒட்டகத்தை விட அதிக நாட்கள் குடிநீர் இன்றி வாழ முடிந்த விலங்கு எது?

9. மனித உடலில் வாழும் நுண்ணியிரிகள் எவ்வளவு?

10. துருவக்கரடிகள் பற்றிய ஏதேனும் வித்யாசமான குறிப்பு சொல்ல முடியுமா?

11. கூரான பிளேடின் முனையில் கூட அடிபட்டுக் கொள்ளாமல் கடந்து போக யாரால் முடியும்?

12. இவ்வுலகில் அதிக வகைப்பாடு கொண்ட உயிரிகள் எவை?

13. ஒரு புள்ளியின் இடத்தில் எவ்வளவு அமீபாக்களை நிரப்ப முடியும்?

இதோ விடைகள்:
1. தேன்சிட்டு
2. மரங்கொத்தி, தேன்சிட்டு போன்ற பறவைகளுக்கு
3. சுறாமீன்
4. ஒட்டகப்பால்
5. முதலை
6. 5 கிமீ தூரத்திலிருந்து
7. அனகோண்டா. முட்டை இடாது. குட்டி ஈனும்.
8. கங்காரு எலி
9. 17,000 வகை
10. அவை அனைத்தும் இடக்கை பழக்கம் உடையவை
11. நத்தை
12. நுண்ணியிரிகள்
13. 70,000 அமீபாக்கள்

நம்புங்க, இதெல்லாம் ஏதோ ஜெனரல் நாலெட்ஜ் புக்கில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் இல்லை. ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் 'உயிரினங்களின் அமைப்பு'ங்கற பாடத்துல இருக்கு. இப்ப எல்லாம் நாம படிச்ச மாதிரி புத்தகங்கள் இல்லை. ப்ரீயா இருந்தா இப்ப இருக்கற ஸ்கூல் புக்ஸ  படிச்சு பாருங்க. செம interesting ஆ இருக்கு. 

Sunday, August 18, 2013

அனுபவம் பேசுது (குடும்பஸ்தர்களுக்கு உபயோகப்படும் டிப்ஸ்)


 ஹா...... கிட்ட தட்ட அஞ்சு மாசம் ஆச்சு பதிவெழுதி... இப்ப இந்த பதிவை டைப் பண்ணும்போது தான் மனசு ரிலாக்ஸ் ஆகுது.  இந்த சுகம் எங்க அம்மா வீட்டுக்கு போறதுல இருக்கற சுகத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருக்கு. என் முகத்துல தானா ஒரு சின்ன புன்னகை வந்து உக்காந்துகிச்சு. Miss You all! :)
 இந்த முறை நான் ஒரு குடும்ப இஸ்திரி ன்னு நிரூபிக்க Home Management சம்பந்தமா சில டிப்ஸ். அனேகமா உங்களுக்கும் உபயோகமா இருக்கும்னு நம்பறேன். இதோ கலந்து கட்டின டிப்ஸ் :

Tuesday, March 19, 2013

இப்பேர்பட்ட மூச்சுப் பயிற்சி வகுப்பு எப்போது?

முதல் கொஞ்சம் மீள் பதிவு :
இந்த சமயத்துல எங்க அப்பா 'திருச்சில மூச்சு பயிற்சி கிளாஸ் நடத்தறாங்க. நீயும் கலந்துக்கறயா?ன்னு கேட்டார். என் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரன் இதை பத்தி பலவிதமா சொல்லி இருக்கறதால என்னன்னு தான் தெரிஞ்சுக்கலாம்னு சரின்னு  சொல்லிட்டேன். போன சனிக்கிழமை காலைல 4 மணிக்கு நானும் அப்பாவும் பஸ்ல கிளம்பினோம். ஸ்பாட்டுக்கு போக 9.30 ஆகிடுச்சு.

வகுப்பெடுத்தவர் ஒரு புத்த பிக்கு. வகுப்பில் என்ன நடத்தினாங்கன்னு கேட்டா 'ஒண்ணும் நடத்தல. ஒரு நாள் முழுக்க 31 விதமா அவங்கவங்க மூச்சை கவனிச்சோம்'ன்னு தான் சொல்லணும். ஆனா அதனோட பலன் அற்புதம். நினைச்சதெல்லாம் நடந்துச்சு.


வகுப்பு முடிஞ்சதும் பஸ்ல இடம் கிடைக்கணும்னு நினைச்சேன். (ஏன்னா அது பொங்கல் லீவ்). பயணம் முழுக்க பஸ் பெரும்பாலும் காலியாகவே வந்துச்சு.

சமயபுரம் டர்னிங்ல பஸ் நிரம்புச்சு. யாராவது குண்டா வந்து உக்காந்தா அசைய முடியாதேன்னு நினைச்சு கவலைப்பட்டேன். நிறைய பேர் ஏறினாங்க. நான் என் போலவே ஒரு ஒல்லி பெண் ஏறியதை பார்த்தேன் அந்த பெண் வந்து உக்காந்தா பரவாயில்லையே ன்னு நினைச்சேன். நிறைய சீட்  காலியா இருந்தாலும் கரெக்டா அந்த பொண்ணே வந்து என் பக்கத்து சீட்லயே உக்காந்துச்சு.

காத்து சேராதுன்னு எனக்கு முன்னாடி சீட் காரங்க ஜன்னல சாத்தணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துச்சு.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி நைட்டு 10.30. முகம் கழுவல, வைப் பேப்பர் கொண்டு போகல முகம் எப்படி இருக்குமோன்னு கண்ணாடிய பார்த்தா  சர்ப்ரைஸ்!!! காலைல வச்ச திருநீறு  கூட கலையல. முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. முகத்துல கொஞ்சம் கூட டயர்ட் இல்லையேன்னு அம்மாவுக்கு கூட ஆச்சரியம்.

 இத்தனை வருஷமா கவனமில்லாம அனிச்சையா  செஞ்சிட்டு இருந்த மூச்சு விடறதை ஒரே ஒரு நாள் கவனிச்சதுக்கே இவ்வளவு பலன். அதெப்படி மூச்சு விடறதுக்கும் இப்படி எல்லாம் நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?ன்னு கேக்கலாம். அதை ஒரு குரு மூலமா கேட்டீங்கன்னா உங்களுக்கும் நன்மை, நம்பிக்கை வரும். நான் இப்ப தான் எல்.கே.ஜி. எனக்கு சரியா சொல்ல வரல. எங்கயாச்சும் இது போல வகுப்பு நடந்துச்சுன்னா நீங்களும் கலந்துக்கோங்க. அதை அனுபவிச்சாதான் அருமை தெரியும். அப்படி எதுவும் அற்புதம் நடக்காட்டியும் கூட, உடம்பு அசையாம எதை பத்தியும் நினைக்காம மூச்சை பத்தி மட்டும் உங்க கவனம் இருக்கறது ஆனந்தம். எந்திரிக்கவே மனசு வராது. நல்லா இருக்கும். வேற எந்த வேலை செஞ்சுட்டு இருந்தாலும் உங்க கவனம் உங்க மூச்சுக்கே வரும். அது ஒரு வித சுகம்ங்க.

நண்பர்கள் இந்த மூச்சுப்பயிற்சி வகுப்பு எங்கே எப்போது நடக்கும் என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு நற்செய்தி. அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்கப் படுகின்றன. 

மார்ச் 30ம் தேதி நடைபெறுகிறது  

முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவீர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை  தொடர்பு கொள்ளுங்க:
98437 71449

Monday, March 18, 2013

லேசிக் சிகிச்சைக்கு பிறகு


ஆபரேஷன் முடிஞ்சதும் பெட்ல எல்லாம் படுக்க வைக்கல. அப்படியே கைய புடிச்சு கூட்டிட்டு போய்  ஒரு சேர்ல உக்கார வைக்கறாங்க.சினிமால காட்டற மாதிரி முருகன் போட்டோ, நமக்கு வேண்டியவங்க எல்லாம் முதன்முதல்ல காட்டல. டாக்டர் தான் நமக்கு முன்னாடி வந்து கண்ணை திறந்து பாருங்கன்னு சொல்றாரு. அவரை பார்த்ததுக்கு அப்பறம் தான் நானா தேடி எங்க வீட்டுக்காரர் எங்கன்னு பார்த்தேன். அவர் தியேட்டருக்கு வெளில நான் வந்துட்டேனான்னு எட்டி பார்த்துட்டு இருந்தார். ஹப்பாடா... அவர் முகத்தை மறுபடியும் (அதுவும் தெளிவா) பார்க்க முடிஞ்சுதேன்னு  கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டேன்.


அப்பறம் மறுபடியும் ஒரு முறை விஷன் செக் பண்ணிக்கறாங்க. எல்லாம் சரியா இருந்தா மாத்திரை, சொட்டு மருந்தை எப்ப எப்படி உபயோகிக்கணும்னு ஒரு கிளாஸ் எடுத்துட்டு கிளம்ப சொல்லிடறாங்க. வீடு பக்கம் என்பதால் நான் கணவரின் பைக்கிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். ஒண்ணும்  பிரச்சனை  இல்ல.ஸோ  லேசிக் ஆபரேஷன  தைரியமா பண்ணிக்கலாம். ஒண்ணும் பயப்பட தேவையே இல்ல.ஆபரேஷனுக்கு பயந்துகிட்டு இந்த காலத்துல யாராவது குழந்தை பெத்துக்காம இருக்காங்களா? அது மாதிரிதான் இதுவும்.ஒண்ணும்  பயப்படாதீங்க.... பார்வை குறைபாடு  தைரியமா ஆபரேஷன் பண்ணிக்கங்க.
பொதுவான கட்டுப்பாடுகள்( குறைந்தது ஒரு மாதத்துக்கு):
1. பளீரென்ற ஒளியை பார்ப்பதை தவிர்க்கணும்

2. டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பதை குறைந்தபட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் 2 வாரம் விட்டு விடுங்கள். மனக்கட்டுப்பாடு இல்லாமல் பார்த்தால் கண்களில் பிரச்சனையை வரும்.

3. முகம் கழுவுதல், தலைக்கு குளித்தல் ஆகியவை டாக்டர்  சொன்ன பிறகு மட்டுமே செய்யவும். தண்ணீரில் கிருமிகள் இருந்தால் காலத்துக்கும் கண்ணில் பிரச்சனை நிரந்தரமாகி விடும். ஆபரேஷன் அன்று தலைக்கு குளித்துக்கொள்வது  உசிதம்.

4. மொபைல் உபயோகித்தல் ரேடியேஷன் பிரச்சனை  ஏற்படுத்தும் என்பதால் குறைந்தது 3 நாட்களுக்காவது தவிர்க்கவும்.

5.  ஒரு வாரம் புத்தகம் படித்தல் கூட வேண்டாம்

6. தூசு படாமல் பார்த்துக்கணும்.

7. கண்களை எக்காரணம் கொண்டும் தேய்க்க கூடாது.

8. ஒரு மாசத்துக்கு தூங்கும்போதும் ஹாஸ்பிடலில் தந்த கண்ணாடி அணிந்தே தூங்க வேண்டும். அப்ப தான் நாம நம்மளையும் அறியாம கண்ணை அழுத்தாம இருப்போம்.

9. புருவம் எடுத்தல், பேசியல் போன்றவற்றுக்கு ஒரு மாதமாவது (சரியான  கால அளவு தெரியல) லீவ் விட்டுடுங்க. ஆபரேஷன் முன்பே வேணா செஞ்சுக்கங்க. கண் மை கூட தவிர்த்துடுங்க .

10. ஷவரில் குளிக்கும்போது கண்களில் தண்ணீரின் சாரல் எப்போதும் நேரடியாக விழக்கூடாது.

11. உடற்பயிற்சிகள் , நீச்சல், நீர் நிறைந்த குடம், பக்கெட் போன்ற பளு தூக்குதல் வேண்டாம்.

12. ஆபரேஷனுக்கு பிறகு இரண்டு கண்களையும் ஒன்றை மறைத்து ஒன்று எப்படி தெரியுதுன்னு பார்க்க கூடாது. அது கண் பார்வையை பாதிக்குமாம்.

13. குறைந்தது 3 டிராப்ஸ் தருவாங்க. ஒவ்வொண்ணையும் குறைந்தது 5 நிமிட இடைவெளிக்கு பிறகே உபயோகிக்க வேண்டும்.

14. Life time க்கு வண்டியில போகும்போது plain glass போட்டுக்கணும். அப்பதான் தூசி மற்றும் கண்கள் காற்றில் காஞ்சு போறதுல இருந்து கண்களை பாதுகாக்க முடியும்.

15. இவ்வளவு சொல்றாங்களேன்னு கண்ணை மூடியே வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. கண்கள் விழித்திருப்பதும் அவசியம்.

அவ்ளோதாங்க அட்வைஸ் .
ஹாங்.... சொல்ல மறந்துட்டேனே..
டாக்டர் கிட்ட லேசர் பண்ணிக்க பயமா இருக்கு. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்றாங்கன்னு சொன்னப்ப டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா?
"யார்கிட்டயும் இதை பத்தி கேக்காதீங்க முக்கியமா நெட்ல இதை பத்தி எல்லாம் படிக்காதீங்க"

Wednesday, February 27, 2013

நிஜமாவே ஒளி படைத்த கண்கள் கிடைச்சாச்சு

எங்க அம்மா அப்பாவோட பயத்தின் காரணமாவே நான் இழந்த நல்ல விஷயங்கள் ஏராளம். அதில் ஒன்று லேசிக் சிகிச்சை. லேசிக் சிகிச்சையும் தெளிவான கண் பார்வையும் எனக்கு கனவாகவே இருந்தது. கொச்சையா சொல்லப்போனா குருட்டு கண்ணோடவே  நான் இருபது வருஷம் கழிக்க வேண்டி இருந்தது . லென்ஸ் வெச்சுக்கறதுக்கே தலையால தண்ணி குடிக்க வேண்டி இருந்துச்சு. (நீங்க போட்டோல பார்க்கறது லென்ஸ் கண்கள் தான்) அப்பவும்  ஆபரேஷன்க்கு நோ தான்.  ஒரு வழியா இப்பதான் எல்லாம் கூடி வந்துச்சு. ஆமாங்க.. நான் கண் ஆபரேஷன் செஞ்சுகிட்டேன். அது சம்பந்தமான அனுபவம் தான் இந்த பதிவு.

பொதுவா இந்த லேசர் ஆபரேஷன் சாதாரணமா பண்றத விட ஒவ்வொரு ஹாஸ்பிடலும் Offer விடுவாங்க, அப்ப  செஞ்சா செலவு பாதியா குறையும். இந்த முறை அகர்வால் ஹாஸ்பிடல்ல Offer ல ஆபரேஷன் பண்றதா விளம்பரம் பண்ணி இருந்தாங்க. சரி விசாரிச்சு பார்த்தோம்.

உள்ளூரிலேயே ஹாஸ்பிடல். தங்கும்  செலவும் போக்குவரத்து செலவும் கிடையாது. டீல்  நல்லா இருந்துச்சு.அதனால் நேரில் போய்  விசாரித்தோம். கண்களை செக் பண்ணி பார்த்துட்டு 'அடிப்படை விஷயங்கள் ஓகே. நீங்க ஆபரேஷன் பண்ணிக்கறதா இருந்தா கண்களை ஸ்கேன் செய்து உங்க கண் ஆபரேஷன்க்கு தகுதியானதான்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கு ஒரு 2500 ஆகும். உங்களுக்கு ஓகேன்னா நாளைக்கு வாங்க'ன்னு சொன்னாங்க.

அடுத்தநாள் போனேன். விதவிதமா செக் பண்ணி, கலர் கலரா பிரிண்ட் எடுத்து குடுத்தாங்க. அதை எடுத்துட்டு போய்  டாக்டர்ட்ட காட்டினேன். டாக்டர் பார்த்துட்டு, 'உங்க கண் ஆபரேஷன் பண்ண தகுதியா தான் இருக்கு.  தனி ஒருத்தருக்கு பண்ணினா செலவு அதிகமாகும். ஒரு ப்ளேடுல மூணு பேருக்கு பண்ணலாம். அதனால ஆள் சேர குறைஞ்சது  ஒரு வாரம் ஆகும். ஆபரேஷன் ரெண்டு நாள் முன்னாடியே சொல்லிடுவோம். அதுவரைக்கும் நீங்க லென்ஸ் வைக்க கூடாது. ஏன்னா கருவிழியில டைரெக்டா அது டச் ஆகும். பிரச்சனை வரும்'ன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே லென்ஸ் வைக்காம கண்ணாடி போட்டுக்கிட்டேன்.

ஒரு வாரம் கழிச்சு போன்:
 நாளைக்கு உங்களுக்கு லேசிக் ஆபரேஷன்னு போன் வந்துச்சு. சடார்ன்னு ஒரு பரபரப்பு, பயம், Excitement, எல்லாம்... Final Destination படத்துல ஒரு பொண்ணு லேசிக் பண்ணிக்கற சீன்  வரும். அது ஒரு accident ல போய்  முடியும். அதெல்லாம் ஞாபகத்துக்கு வர ஆரம்பிச்சுடுச்சு. பயப்பட ஆரம்பிச்சுட்டேன். அப்பறம் எங்க அம்மாவும், கணவரும் தான் தைரியம் குடுத்தாங்க. அடுத்த டைம் water theme park போனா கண்ணாடி, லென்ஸ் பத்தி கவலைபடாம என்ஜாய் பண்ணலாம். அதை நினைச்சுக்கோ ன்னு எங்க ஆத்துக்காரர் சொன்னார்.அதையே புடிச்சுக்கிட்டு பாசிடிவாவே நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்த நாள்: 
 
மத்தவங்க கிட்ட சொன்னா தேவை இல்லாம பயப்படுத்துவாங்கன்னு சொந்தபந்தம் யார்கிட்டயும் சொல்லாம, எங்க ரெண்டுபேர் அம்மா அப்பா, நாங்க ரெண்டு பேர் மட்டும் (இதுவே 6 பேர் ஆச்சு) போனோம். நெகடிவ் எண்ணங்கள் முளைத்தாலும் வளர விடாமல் பார்த்துக்கொண்டேன். இதற்கு முன் எடுத்த அடிப்படை ரிசல்டை மீண்டும் ஒரு முறை செக் பண்ணிகிட்டாங்க.அப்பறம்  ஆபரேஷன் தியேட்டர் முன்னாடி காத்திருந்தோம். நெர்வஸ் ஆக ஆரம்பிச்சுது. ஒருவேளை கண் போயிடுச்சுன்னா  என் கணவர் முகத்தை மறுபடி பார்க்க முடியுமான்னு எல்லாம் தோணுச்சு . நான் பயப்பட்டா எங்க அம்மா அப்பாவும் பயப்படுவாங்கன்னு இயல்பா காட்டிகிட்டேன். உண்மையில் என் கணவர் மிகப்பெரிய பூஸ்ட். அவர் எங்களை பயப்பட விடவே இல்லை. I should thank him!

operation theatreக்கு உள்ள வாங்கன்னு கூட்டிட்டு போனாங்க. அது வரைக்கும் அப்படி ஒரு இடத்தை நான் பார்த்ததே இல்லை.த்ரில், சந்தோஷம், பயம், எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சியோட உள்ளே போனேன். எதுக்கும் கடைசியா எங்க வீட்டுக்காரர் முகத்தை ஒருதரம் பார்த்துக்கிட்டேன். ( ஹஹஹா. ஓவரா இருக்குல ).


உள்ள ஒரு கட்டில்ல படுக்கவெச்சு கண்ணை கிளீன் பண்ணினாங்க.  கண்ணை திறக்க சொல்லி சிரிஞ்சுலயோ எதுலயோ தண்ணிய பீச்சி அடிச்சாங்க. ஹய்யோ...  எனக்கென்னமோ அதுதான் பெரிய டார்ச்சரா  இருந்துச்சு. தண்ணில  மூழ்குனா மூச்சு முட்டுமே அது மாதிரி இருந்துச்சு. கண்ணுக்கும் மூக்குக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல இருக்கு. என்னால கண்ணை திறக்கவே முடியல.அவங்க 'கண்ணை திறங்க மேடம்... கிளீன் பண்ணனும். கோ ஆபரேட் பண்ணுங்க ப்ளீஸ்'ன்னு சொல்றாங்க. நானும் முயற்சி பண்றேன். ம்ஹும்...என்னால முடியல. இதுக்கு இவ்ளோதான்னு அவங்களும் விட்டுட்டாங்க.

அப்பறம் ஆபரேஷன் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க. செம கூலிங். உடம்பு உதறுது. லேசர் கதிர் பாயும்போது உதறிட்டா என்ன பண்றதுன்னு பயம். அப்படியெல்லாம் ஒண்ணும் பெருசா  பயப்படவேண்டாம். ஒண்ணும்  ஆகாதுன்னு சொல்லிட்டாங்க. படுக்க வெச்சு போர்வை போர்த்தி கை காலை அசைக்க வேணாம்னு சொல்லி முகத்துல ஒரு பிளாஸ்டிக் கவரை போடறாங்க. அதுல கண் பக்கம் கட்டிங் இருக்கு. அது வழியா கண்ணை ஓபனா வைச்சுக்கறாங்க. அப்ப ஒரு கிளிப் போடுவாங்க பாருங்க.... எனக்கு ஆபரேஷனே வேணாம்டா சாமின்னு ஆயிடுச்சு. ஆனா அப்படி ஒரு கிளிப் போட்டாதான் நாம கண்ணை மூடிக்காம  இருப்போம்.

(இந்த படம் தன கொஞ்சம் பயப்படுத்தாம இருந்துச்சு.)

அதுக்கப்பறம் கண்ணுல ஒரு சொட்டுமருந்து விடறாங்க. விட்டதும் அவங்க கண்ணுல கைய வெச்சா கூட தெரிய மாட்டேங்குது. முன்னெல்லாம் மரத்துபோக ஊசி போடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனா இப்ப இப்படி சொட்டு மருந்து விட்டாலே போதும். அவங்க என்னென்ன பண்ணினாங்களோ அத்தனையும் பார்க்க முடியுது. ஆனா வலியே  தெரியறதில்லை. கண் கிட்ட என்னென்னமோ கொண்டு வராங்க. கண்ணுல வெச்சு என்னென்னமோ செய்யறாங்க. அதெல்லாம் நாம நம்ம சைடுல இருந்து பார்க்கற மாதிரி இருக்கு.

கண்ணுல இருந்து ஒரு படலத்தை தூக்கின மாதிரி இருந்துச்சு. அவ்ளோ தான்... கண் பார்வை அப்படியே பறிபோச்சு. பார்வை பறி  போகறதை 'பார்த்தேன்'னு தான் சொல்லணும்  அந்த கொஞ்ச செகண்ட்ஸ் நான் வேண்டாத தெய்வம் இல்லை. அப்பறம் அவங்க ஏதோ ஒண்ணு ... முறுக்கு பிழியற மெஷின் சின்ன சைஸ்ல இருக்கற மாதிரி ஒண்ணை வெச்சு கண்ணுல 10 செகண்ட்ஸ் அழுத்தினாங்க . கடவுளே.. அந்த வலியை மறக்கவே முடியாது. அதனால எப்பவெல்லாம் வலிக்குதுன்னு சொன்னேனோ அப்பவெல்லாம் அந்த சொட்டு மருந்தை போட்டுட்டே இருந்தாங்க. உடனே சரியா போய்டும். அப்பறம் பழையபடி அந்த படலத்தை மறுபடியும் செட் பண்ணினாங்க. முதலில் பச்சையும் மஞ்சளும் கலந்த ஆர்ட் மாதிரி உருவங்கள் தெரிஞ்சுச்சு. அப்பறம் மெதுவா தெளிவில்லாம ஒரிஜினல் கலரோட உருவங்கள் தெரிய ஆரம்பிச்சுச்சு. பழைய பார்வை மறுபடியும் கிடைசுச்சு. (இந்த போட்டோவ போடறப்ப தான் நான் உணர்ந்ததும் இந்த போட்டோல இருக்கறதும் ஒண்ணுன்னு தெரியுது.)
அதுக்கு அப்பறமா தான் லேசர் கதிரை  செட் பண்ணி கண்ணில் விடறாங்க. விடும்போது லேசர் ஷோவில் எல்லாம் காட்டுவார்களே... கசகசன்னு முக்கோணம் போன்ற வடிவத்தில் தெரியுது. கண்ணை அசைக்க கூடாதுன்னு நம்ம மனசே சொல்லும். ஷேப்ப கவனிக்காம லேசர் புள்ளியை மட்டும் பார்க்கணும். அனேகமா ரெண்டு நிமிஷத்துக்கு மேல ஆகல . வேலை முடிஞ்சுது. மறுபடி க்ளிப்பை கழட்டும்போது வலிக்கும். அவ்ளோ தான்.  அதே மாதிரி ரெண்டாவது கண்ணுக்கும் பண்ணினாங்க. மொத்தமாவே 20 நிமிஷம் தான் ஆயிருக்கும். இந்த பதிவு எழுத ஆன நேரத்தை விட குறைவு தான். அப்பறம் ரெண்டு கண்ணுலயும் ஒரு கால் மணி நேரத்துக்கு மூடியே வெச்சிருக்க சொன்னாங்க.

(தொடரும் )

Monday, January 21, 2013

எது சுகம்?

எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வந்தது. காரணம் பெரியதாக ஒன்றும் இல்லை. உருளை கிழங்கை தீய்ச்சுட்டோம். அதுக்கு காரணம் நீ நான் ன்னு ஒரு மானங்கெட்ட சண்டை. அந்த சண்டையை சாக்கா வெச்சு இத்தனை நாள் என் மேல் இருந்த குறையை அவங்களும் அவங்க மேல இருந்த குறையை நானும் சொல்லிக்கிட்டோம். அப்ப என் கணவரை பார்க்கத்தான்  பாவமா இருந்துச்சு. அவர் அம்மா பையன். ஆனா அதே சமயம்  நான்னா உயிர். ரெண்டு பேருக்கும் நடுவுல அவர் தவிச்சதால தான்,  மனசு கேக்காம மாமியாரும் மருமகளும் சண்டைய முடிச்சுகிட்டோம்.

நான் ஒரு இடத்துல மனத்தாங்கல் வந்துச்சுன்னா பெரும்பாலும் உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பிடுவேன். அப்ப தான் பிரச்சனையை பெருசாகாம இருக்கும். நானும் தனிமைல என்கிட்டே  குறை இருக்கா, அதுக்கு என்ன காரணம், எப்படி சரி பண்ணிக்கறதுன்னு யோசிச்சு சரி பண்ணிக்குவேன். அதனால  'நான் எங்க வீட்டுக்கு போய் ஒரு ரெண்டு நாளைக்கு தங்கிட்டு வரேன்னு' சொல்லிட்டு வந்துட்டேன். சண்டை போட்டுட்டு கோவிச்சுகிட்டு வராம சமாதானம் ஆகி, என் கணவரோட தான் வந்தேன். அதனால எங்க அம்மா அப்பா ஒண்ணும்  சொல்லல.

எங்க வீட்டுக்கு வந்து நான் செஞ்ச முதல் காரியம் குளிச்சுட்டு ரெய்கி தியானம் பண்ணினது தான். உண்மையிலேயே மனசுல இருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வெளிய போட்ட மாதிரி இருந்துச்சு. தொடர்ந்து ரெண்டு நாளும் காலைல சக்தியூட்டும் தியானமும், சாயந்திரம் சக்ரா  தியானமும்  செஞ்சேன். சண்டை போட்ட நாளுக்கு முன்னாடி வரை யாராவது அந்த ரெண்டு கேள்வியையும் கேட்டா உடனே  ஏதோ துக்கம் தொண்டையை அடைச்ச மாதிரி அழுகை வர்ற மாதிரி இருக்கும். ஆனா தியானம் செஞ்சு மனசை சரி செஞ்சுகிட்டதால அந்த ஸ்ட்ரெஸ் போய்டுச்சு.

மூணாவது நாள் அவங்க வீட்டுக்கு போனதும் அவங்க எப்பவும் போல பேசினாங்க . நானும் சரி ஆகிட்டேன். அன்றிலிருந்து தியானம் செய்ய தவறவே இல்ல. இந்த சமயத்துல எங்க அப்பா 'திருச்சில மூச்சு பயிற்சி கிளாஸ் நடத்தறாங்க. நீயும் கலந்துக்கறயா?ன்னு கேட்டார். என் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரன் இதை பத்தி பலவிதமா சொல்லி இருக்கறதால என்னன்னு தான் தெரிஞ்சுக்கலாம்னு சரின்னு  சொல்லிட்டேன். போன சனிக்கிழமை காலைல 4 மணிக்கு நானும் அப்பாவும் பஸ்ல கிளம்பினோம். ஸ்பாட்டுக்கு போக 9.30 ஆகிடுச்சு.

வகுப்பெடுத்தவர் ஒரு புத்த பிக்கு. வகுப்பில் என்ன நடத்தினாங்கன்னு கேட்டா 'ஒண்ணும் நடத்தல. ஒரு நாள் முழுக்க 31 விதமா அவங்கவங்க மூச்சை கவனிச்சோம்'ன்னு தான் சொல்லணும். ஆனா அதனோட பலன் அற்புதம். நினைச்சதெல்லாம் நடந்துச்சு.

வகுப்பு முடிஞ்சதும் பஸ்ல இடம் கிடைக்கணும்னு நினைச்சேன். (ஏன்னா அது பொங்கல் லீவ்). பயணம் முழுக்க பஸ் பெரும்பாலும் காலியாகவே வந்துச்சு.

சமயபுரம் டர்னிங்ல பஸ் நிரம்புச்சு. யாராவது குண்டா வந்து உக்காந்தா அசைய முடியாதேன்னு நினைச்சு கவலைப்பட்டேன். நிறைய பேர் ஏறினாங்க. நான் என் போலவே ஒரு ஒல்லி பெண் ஏறியதை பார்த்தேன் அந்த பெண் வந்து உக்காந்தா பரவாயில்லையே ன்னு நினைச்சேன். நிறைய சீட்  காலியா இருந்தாலும் கரெக்டா அந்த பொண்ணே வந்து என் பக்கத்து சீட்லயே உக்காந்துச்சு.

காத்து சேராதுன்னு எனக்கு முன்னாடி சீட் காரங்க ஜன்னல சாத்தணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துச்சு.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி நைட்டு 10.30. முகம் கழுவல, வைப் பேப்பர் கொண்டு போகல முகம் எப்படி இருக்குமோன்னு கண்ணாடிய பார்த்தா  சர்ப்ரைஸ்!!! காலைல வச்ச திருநீறு  கூட கலையல. முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. முகத்துல கொஞ்சம் கூட டயர்ட் இல்லையேன்னு அம்மாவுக்கு கூட ஆச்சரியம்.

 இத்தனை வருஷமா கவனமில்லாம அனிச்சையா  செஞ்சிட்டு இருந்த மூச்சு விடறதை ஒரே ஒரு நாள் கவனிச்சதுக்கே இவ்வளவு பலன். அதெப்படி மூச்சு விடறதுக்கும் இப்படி எல்லாம் நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?ன்னு கேக்கலாம். அதை ஒரு குரு மூலமா கேட்டீங்கன்னா உங்களுக்கும் நன்மை, நம்பிக்கை வரும். நான் இப்ப தான் எல்.கே.ஜி. எனக்கு சரியா சொல்ல வரல. எங்கயாச்சும் இது போல வகுப்பு நடந்துச்சுன்னா நீங்களும் கலந்துக்கோங்க. அதை அனுபவிச்சாதான் அருமை தெரியும். அப்படி எதுவும் அற்புதம் நடக்காட்டியும் கூட, உடம்பு அசையாம எதை பத்தியும் நினைக்காம மூச்சை பத்தி மட்டும் உங்க கவனம் இருக்கறது ஆனந்தம். எந்திரிக்கவே மனசு வராது. நல்லா இருக்கும். வேற எந்த வேலை செஞ்சுட்டு இருந்தாலும் உங்க கவனம் உங்க மூச்சுக்கே வரும். அது ஒரு வித சுகம்ங்க.

Thursday, January 17, 2013

என்னை பார்த்து ஏன் அந்த கேள்வி கேட்டாங்க?

 கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு நான்கு மாதம் கழித்து என்னை சந்திப்பவர்களில்  பெரும்பாலானோர் என்னை பார்த்து இரண்டு கேள்விகளில் ஒன்றை கட்டாயம் கேட்டார்கள்.

1. என்ன இது, இவ்வளவு இளைச்சு போய்ட்ட? (ஏற்கனவே நான் ஒல்லி என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்)
2. அட, எங்க போச்சு உன் கலர்? இப்படி கறுத்துப் போய்ட்ட? (நான் வெள்ளையாக இருந்தேன் என்பது அவர்கள் எண்ணம். நான் பளிச்சென்று இருந்தேன் என்பது என் எண்ணம் . என்னை நேரில் பார்த்தவர்கள் அறிவீர்கள்.)

எங்க போச்சு என் கலரும் உடம்பும்? கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு உப்புமா வேணும்மா... (நான் ஒரு உப்புமா பைத்தியம்) என்று கேட்ட சில நிமிஷங்களில் எனக்கான உப்புமா ரெடியாக இருக்கும். நான் ஒல்லியா இருக்கறதால எங்க அம்மா டெய்லி ஜூஸ் தருவாங்க. ( மென்னு சாப்பிட சோம்பேறித்தனம் ) . மானாட மயிலாட ப்ரோகிராம மிஸ் பண்ணினதே கிடையாது. விருப்பப்பட்ட கிளாஸ்ல சேர்ந்துக்குவேன். அந்த லைப் செமையா இருந்துச்சு.

 நான் எது செய்தாலும் அது பாராட்டப்படும் போது எனக்கு தன்னம்பிக்கை அதிகரிச்சுது. திட்டப்படும்போது கவலையை மனசுக்குள் கொண்டு போகாமல் என்ன காரணத்துக்காக திட்டப்படறேன்னு அனலைஸ் பண்ணிக்க முடிஞ்சுது. ரெகுலரா தியானம் பண்ணி மனசை ஒரு சமநிலையில வச்சுக்க முடிஞ்சுது. மனம் தெளிவா இருந்ததால முகமும் தெளிவா இருந்துச்சு. எல்லாம் ஒரு வட்டத்துல சரியா போயிட்டு இருந்துச்சு.


கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கான உப்புமாவை நானே செய்துகொள்ள வேண்டியிருந்தது. ஜூஸா  குடிக்காத, மென்னு சாப்பிடு, அதுதான் சத்துன்னு எங்க மாமியார் சொல்வாங்க. டிவி அவங்க இஷ்டத்துக்கு பார்த்துக்கட்டும், நாம புக் படிச்சுக்கலாம்ன்னு டிவி பார்க்கறதை விட்டுட்டேன். இந்த ஏரியால எந்த கிளாசும் கற்றுத்தருவது கிடையாது.  தியானம் செய்ய நேரம் இல்ல, சாமி என் இஷ்டத்துக்கு கும்பிட முடியல, பதிவு எழுத முடியல, டைரி எழுத மறந்தே போச்சு, அப்படி இப்படின்னு சில விரும்பாத மாறுதல்களும் நடந்துச்சு. எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு கொஞ்சம் கொஞ்சமா சுய இரக்கம்  தலைகாட்டத்  தொடங்கியது..

எங்க மாமியார் மாமனார் என்னை பொண்ணு மாதிரி நல்லா பாத்துக்கிட்டாலும் என்னை பாராட்டியதில்லை. ஏன்னா அவங்க பாராட்டற மாதிரி நான் நடந்துகிட்டதில்லை. நான் சமையல் வேலைக்கு ரொம்ப புதுசு. மாமியார்கிட்ட கத்துகிட்டு தான் சமைக்க ஆரம்பிச்சு இருக்கேன். இதுக்கு அவங்க என்னை திட்டாம இருக்கறதே பெருசு.

அவங்க திட்டற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு மாமனார், மாமியார், என் கணவர் இவங்க அன்புக்காகநானே பல விஷயங்கள்ல என்னை மாத்திக்கிட்டேன்.  நேரமா எழுந்திரிக்கறதுல  ஆரம்பிச்சு நைட் தூங்கற வரைக்கும் நான் செய்யற பல செயல்கள் நானா விருப்பப்பட்டு என்னை மாத்திக்கிட்டேன்.

மேலும், உடம்பு இளைச்சதுக்கு உடல் உழைப்பும், சரியான சாப்பிடாததும் காரணம்.  அம்மா சமையல் டேஸ்ட் வேற. மாமியார் சமையல் டேஸ்ட்  வேற. எனக்கோ சமைக்க தெரியாது. கடமைக்கு சாப்பிட்டேன். 

இந்த சமயத்துல அந்த ரெண்டு கேள்விகளும் அடிக்கடி கேட்கப்பட ஆரம்பிச்சுது. ஒரு பலசாலிய பார்த்து ஊரே 'என்ன இப்படி ஆகிட்டீங்க'ன்னு கேக்க ஆரம்பிச்சதும் அவன் பலம் போய்டுமே... அந்த கதையா நானும் நொந்து போக ஆரம்பிச்சேன். என் கணவருக்கு என் கலரும் என்னிடம் பிடிச்ச விஷயம். ஒரு கட்டத்தில் அவரே 'என்ன இவ்ளோ கருத்துட்ட ?' என்று கேட்க ஆரம்பிச்சார். பயங்கர மனஅழுத்தம். என் கணவர் கிட்ட 'என்னை ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போங்க. எனக்கு ஸ்ட்ரெஸ் ரிலீவ் ஆகணும்' ன்னு கேட்டேன். சரின்னு சொல்லி இருந்தார்.

அந்த சமயத்தில் தான் எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வந்தது.

(தொடரும்)