Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, June 19, 2012

கல்யாணம்னா ஒரு பொண்ணுக்கு எப்படி இருக்கும்?

அச்சச்சோ.... என் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு. நலுங்கு வைக்க அத்தை மாமா எல்லாரும் வந்தாச்சு. ஒரு பக்கம் இன்னும் ஷாப்பிங் போய்கிட்டே இருக்கு. என் ஆத்ம நண்பரையே கல்யாணம் பண்ணிக்க போறேன்.  நானும் அவரும் தான் ஒண்ணா சேர்ந்து இன்விடேஷன் குடுக்கறோம், தேவையான திங்க்ஸ் வாங்கிக்கறோம். நாங்க நண்பர்களா சுத்துனதை விட வருங்கால கணவன் மனைவின்னு சுத்தறது ஒரு வித்யாசமான உணர்வை தருது.
                     கல்யாணம்ங்கறது பசங்களுக்கு எப்படியோ. ஆனா பொண்ணுங்களுக்கு கலந்து கட்டி பல உணர்வுகளை  உண்டாக்குது.
* கூடை கூடையா  நாம அன்பு காட்டவும், நம்ம மேல அன்பு காட்டவும், நமக்கே நமக்குன்னு ஒரு ஆள் வரப்போறாங்கன்னு சந்தோஷம் பொங்குது.
* இத்தனை வருஷமா நம்மள அவ்ளோ பத்திரமா பொறுப்பா இளவரசி மாதிரி நம்மள பார்த்துகிட்ட அம்மா அப்பாவை விட்டு இன்னொரு இடத்துக்கு போறோம்னு அழுகையா வருது.
.............
.............
 .............
 .............
 .............
 .............
 .............
 .............
 .............
(ஸீ .... கண்ணுல தண்ணி பொங்குது)
* எந்த பெரிய கவலையும் இல்லாம இஷ்டப்பட்ட மாதிரி வாழ்ந்துட்டு இருந்தோம், இப்ப நிறைய பொறுப்பு வருதேன்னு யோசனையா இருக்கு.
* புகுந்த வீட்டுல அவங்க எல்லாம் என்ன மாதிரி ஆளுங்க, என்ன பேர் எடுக்க போறோம்னு பயமா இருக்கு.
* எனக்கும் அவருக்குமான ரொமான்ஸ் வாழ்க்கைய நினைச்சா படபடப்பா இருக்கு.
* இவ்ளோ நாள் கல்யாணம் ஆகாத பொண்ணுங்கறதால பசங்க சைட் அடிச்சுட்டு இருந்ததை மிஸ் பண்ண போறோமோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு ;-)   .
* எல்லார் மாதிரியும் எனக்கும் குடித்தனம் பண்ண போற தகுதி வந்தாச்சுன்னு ரொம்ப பெருமையாவும் இருக்கு.

ஒரு நிமிஷம் இருக்கற உணர்வு அடுத்த நிமிஷம் இருக்கறது இல்ல. என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் எப்படி இருக்க போகுதோ....... தெரியல. ஸோ , இந்த நிமிஷத்தை என்ஜாய் பண்ணிக்க மட்டும் மனசுக்கு கட்டளை போட்டுகிட்டே இருக்கேன்.

Monday, June 11, 2012

எங்க அம்மா அப்பாவுக்கு விடுதலை

அட ஆமாங்க... ஜூன் 21 ம் தேதில இருந்து எங்க அம்மா அப்பா சுதந்திரமா இருக்க போறாங்க. டெய்லி காலைல ஒன்பது மணிக்கு  'எந்திரி எந்திரி' ன்னு கத்திகிட்டு இருக்க தேவை இல்ல. பதினொரு மணிக்கு 'சாப்பிடு சாப்பிடு' ன்னு வெத்தல பாக்கு வச்சு அழைக்க தேவை இல்ல. நேரமா 'தூங்கு தூங்கு'ன்னு டென்ஷனாக தேவை இல்ல. முக்கியமா அவங்களோட ரொம்ப ரொம்ப அழகான பொண்ண (No Bad Words Pls) சைட் அடிக்கற பசங்க கிட்ட இருந்து பாதுகாக்கற டென்ஷன் இல்ல.
ஏன்னு கேக்கறீங்களா?

ஏன்னா எனக்கு கல்யாணம்  :)
 


இவ்ளோ நாள் கல்யாண வேலைய கவனிச்சுகிட்டு (அதாங்க... ஷாப்பிங்) ப்ளாக் போட நேரமே இல்லாம பிசியா இருந்துட்டேன். பத்திரிகை விநியோகம் நடந்துகிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே  இருக்கு. எல்லாரையும் கூப்பிட்டுட்டு நம்ம ப்ளாக் நண்பர்களை கூப்பிடாம விட்டா சரியா? அதனால உங்களை என் கல்யாணத்துக்கு கூப்பிடறேன். வந்துடுங்க . இதோ இன்விடேஷன்.