Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, April 17, 2012

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி

பதிவிட்டு ரொம்ப நாள் ஆனதால நம்ம பக்கத்துக்கு ஆளுங்களை மறுபடி இழுக்கணும் இல்லையா? அதனால ஒரு சின்ன போட்டி.
 


வேலை பளு தெரியாம இருக்க நம்மில் பெரும்பாலானோருக்கு கம்பெனி குடுக்கற  ஒரு(ரே) ஆள் இளைய ராஜா. நமக்கு வயசாகுது, நம்ம ரசனை மாறுதுங்கறதை இந்த ராட்சசனோட பாட்டை ரசிக்க ஆரம்பிக்கறதுலயே தெரிஞ்சுக்கலாம். ஸோ, நான் இங்க சில பாடல்களின் இடையில் வரும் வரிகளை குடுக்கறேன். முதல் வரிகளை கண்டுபிடிங்க. ஓகே?


1. உந்தன் சங்கீத சலங்கை ஒலி
    இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
 
2. உன்னை காணாதிருக்கும் நொடி நேரம்
    பல மாதம் வருடம் என ஆகும்

3. ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பேரை சொல்லாதோ
    பூவசந்தமே நீ மறந்ததேன்
 
4. நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
    நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்

5. காலை பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ 
    மாலை மயக்கம் நீ பொன்மலரும் நீ என் நினைவும் நீ

6. வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும் 
    கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் 

7. தேடினேன் ஓ என் ஜீவனே 
    தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே

8. தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோஷம்
    உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்

9. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
      தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ
  
Last But not Least

10. பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே 
      சிறகிரண்டை விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே

அனேகமா ஒண்ணே ஒன்னு தான் கொஞ்சம் கஷ்டம். மீதி எல்லாம் ரொம்ப ஈசியாதான் குடுத்திருக்கேன். try பண்ணுங்க...


 

11 comments:

பாலா said...

1. வெள்ளி சலங்கைகள் - காதல் ஓவியம்

2. வலையோசை கலகல - சத்யா

3. தேவதை இளம் தேவி - ?

4. காற்றில் எந்தன் கீதம் - ஜானி

5. பேசக்கூடாது - அடுத்தவாரிசு

6. ராத்திரியில் - தங்கமகன்

7. காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை

8. அடி ஆத்தாடி - கடலோர கவிதைகள்

9. என்ன சத்தம் - புன்னகை மன்னன்

10. நான் தேடும் - தர்மபத்தினி

சரியா மேடம்?

வெளங்காதவன்™ said...

1.சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
2. வளையோசை கலகலவென
3. ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
4. காற்றில் எந்தன் கீதம்
5. பேசக்கூடாது(I think some words confusing)
#காலைப் பணியும், கண்ணின் மணியும், எந்தன் கனவும் நீ
As I think....
6. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்
7. காதல் ஓவியம் பாடும்
8. அடி ஆத்தாடி
9. என்ன சத்தம் இந்த நேரம்?
10. நான் தேடும் செவ்வந்திப்பூவிது

வெளங்காதவன்™ said...

ராஜாவின் இசையின்றி, தனிமைப் பொழுதுகள் கழிவதேயில்லை! காலத்தால் அழியாத பாடல்கள், ராஜாவின் பேர் சொல்லும் என்றும், என்றென்றும்...!!!!

#மாடு மேய்க்கும்போது கேட்க ரொம்பப் பிடிக்கும்... ஹி ஹி ஹி ஹி...

சுபத்ரா said...

1. வெள்ளிச்சலங்கைகள்..கொண்ட கலைமகள்...வந்து ஆடும் காலமிது!

2. வலையோசை கலகலகலவெனக்
கவிதைகள் படிக்கிது குளுகுளுத் தென்றல் காற்றும் வீசுது.....

3. தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி

4. காற்றில்...எந்தன் கீதம்...காணாத ஒன்றைத் தேடுதே..

5. பேசக்கூடாது... வெறும் பேச்சில் சுகம்... ஏதும் இல்லை...

6. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ..

7. காதல் ஓவியம் பாடும் காவியம்....தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்..

8. அடி ஆத்தாடி.. இளமனசொன்னு ரெக்க கட்டி பறக்குது சரிதானா..

9. என்ன சத்தம் இந்த நேரம்... உயிரின் ஒலியா.

10. நான் தேடும் செவ்வந்திப் பூவிது.. ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது... பூவோ இது வாசம்.. போவோம் இனி காதல் தேசம்.. :-)

Number "3" was difficult for me...

கோவை நேரம் said...

9 ) கமல் படம் ..புன்னகை மன்னன் --என்ன சத்தம் இந்த நேரம்

கோவை நேரம் said...

10) நான் தேடும் செவந்தி பூவிது..

சாதாரணமானவள் said...

@ பாலா
மிகச்சரி பாலா...

சாதாரணமானவள் said...

@ வெளங்காதவன்
பத்தில் எட்டு சரி. நான் கொடுத்த வரிகளும் சரி. ராஜா பற்றிய உங்கள் கருத்துகளும் சரி.

சாதாரணமானவள் said...

@ சுபத்ரா
right சுபா

சாதாரணமானவள் said...

@ கோவை நேரம்
சரிங்க

யுவராணி தமிழரசன் said...

தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
http://dewdropsofdreams.blogspot.in