Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, February 21, 2012

நான் ராமேஸ்வரத்துக்கு போனேனே... பார்ட் 1

ஹப்பாடா... பார்ட் 1 , பார்ட் 2 போட்டு எழுத இன்னுமொரு விஷயம் கிடைச்சுடுச்சு. ஆமாங்க... இந்த முறை நான் ராமேஸ்வரம் போயிட்டு வந்தத பத்தி பகிர்ந்துக்க போறேன். நான் ஒழுக்கமா ஒரு பதிவுல முடிச்சுடலாம்னு தான் நினைச்சேன். ஆனா திருச்சி போன பதிவுக்கு செம வரவேற்பு (?!) இருந்துச்சா... அதான் இதையும் தொடரும் போட்டு எழுதலாம்னு முடிவெடுத்துட்டேன்.

அதாகப்பட்டது என்னன்னா... இந்த ராமேஸ்வரம் ட்ரிப் இருக்கே... இது ஒரு பத்து பதினஞ்சு வருஷமா போகணும் போகணும்னு பிளான் போட்ட ட்ரிப். ஜோசியர்கள் 'முன்னோர்கள் வழில தோஷம், சாபம்  இருக்கு. அதுக்கு நீங்க ராமேஸ்வரமும் தேவிபட்டினமும் போயிட்டு வாங்க' ன்னு சொல்லி இருந்தாங்க. இருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி எங்க குடும்பத்துல கல்யாணமான பொண்ணுங்க அஞ்சு வருஷம் புருஷன் வீட்ல இருந்துட்டு, குழந்தை பிறந்து ஒரு வருஷத்துல அம்மா வீட்டுக்கு வந்துடறாங்க. இதுக்கு பயந்துகிட்டே நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்பறம் தோஷத்தை கண்டுபிடிச்சவங்க பரிகாரத்தையும் கண்டுபிடிச்சிருக்காங்களே... அதனால போயிட்டு வந்தா நல்லது நடக்கும்னு எனக்கும் நம்பிக்கை வந்தது.

நான் பலமுறை போக முயற்சித்தும் அது நடக்கவே இல்லை. எல்லாம் சாதாரண காரணங்களுக்காக. ராமேஸ்வரம் போகாம என் கல்யாண பேச்சே எடுக்காதீங்கன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். 

கடைசியா ஒரு மாசத்துக்கு முன்னாடி குடும்ப உறுப்பினர்கள் 22 பேரையும் சேர்த்து ஒண்ணா போகலாம்னு பிளான் பண்ணினோம். முதல்ல சாக்கு போக்கு சொன்னவங்க, எனக்காகவே சரின்னு சொன்னாங்க.

 பேச்சு வார்த்தை இருக்கறவங்க, சண்டை போட்டவங்க, Egoist எல்லாரும் மத்த பிரச்சனைய எல்லாம் ஒத்தி வெச்சுட்டு கோயிலுக்கு போறதுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. வண்டி ரெடி... டூர் போக நாள் குறிச்சாச்சு... வழில சாப்பிட என்ன சமைக்கறது, யார் சமைக்கறது, எல்லாம் fix பண்ணியாச்சு...
 
அடுத்த நாள் மதியம் கிளம்பலாம்னு இருக்கறப்ப TV ல பிளாஷ் நியூஸ். திண்டுக்கல் ல பசுபதி பாண்டியன் ன்னு முக்கியமான ஒருத்தரை வெட்டிட்டாங்க. தென் மாவட்டங்களில் கலவரம்ன்னு. வீட்ல இருக்கறவங்க எல்லாம் அப்படியே டூரை கேன்சல் பண்ணிட்டாங்க.
 
எப்பவுமே புண்ணிய ஷேத்திரங்கள் போகும்போது இப்படித்தான் தடைகள் வருமாம். ஏன்னா, நாம போக நினைச்சதும் போக முடியாது. அந்த இடத்துல இருக்கற தெய்வம் ஓகே இவங்க வரட்டும்னு நினைக்கணுமாம். அதனால 'நீ ஏன் நான் வரணும்னு நினைக்க மாட்டேங்கற? ஏன் இப்படி தடுத்துகிட்டே இருக்கற?ன்னு சாமிகிட்ட சண்டையான சண்டை போட்டேன். அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது கடவுள் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு காரணத்தோடு தான் நடத்தறார்னு .

ஆமாம். நாங்க கிளம்ப நினைச்சா அதே நாள்ல  தான் என் தாய்மாமா இறந்து போனார்.

(தொடரும்)

1 comment:

thamizhiniyan said...

நல்ல இருக்கா -ல நீங்க சொன்ன விஷயம் ரொம்பவே நல்லா இருந்திச்சி புதுசாவும் இருந்திச்சி. உக்காந்து யோசிச்சிங்களோ??????