Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, December 18, 2011

ஈரோடு சங்கமம் 2011 - நடந்தது என்ன ?


ஆஹா... ஈரோடு சங்கமம் பத்தி நான் தான் சுடச்சுட முதல் பதிவு தர போறேனா? Good na....

Alright! திங்கள் கிழமையோ செவ்வாய் கிழமையோ சங்கவி போன் பண்ணி இருந்தார். 'ஈரோட்டில் சங்கமம் நடக்க போகுது. நீங்க கண்டிப்பா வர்றீங்க. போன வருஷமும் வரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல. இந்த முறை கண்டிப்பா வாங்க. நிறைய பெண் பதிவர்களும் வர்றாங்க'ன்னு சொன்னார். போன வருஷமே சங்கவி எழுதுன பதிவுல எல்லார் வாயிலும் ஜொள்ளு வடியற அளவு, உணவு ஏற்பாடு பத்தி எழுதி இருந்தாரா... எங்க இந்த தடவை மிஸ் ஆயிடுமோன்னு வேற ஒரு எண்ணம். நாமளும் இந்த வருஷம் கொஞ்சம் வளந்துட்டோமா... (அட உயரத்துலப்பா...) அதனால கண்டிப்பா வரேன்னு துண்டு போட்டுட்டேன்.

எப்படா ஞாயித்து கிழமை வரும்...எல்லாரையும் பார்க்கலாம்னு நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். ஞாயித்து கிழமை காலை சங்கவிக்கு 'எப்ப வரட்டும்? ஆரம்பிச்சுட்டாங்களான்னு'  போன் பண்ணினேன்.  9.30 க்கு வந்துடுங்கன்னு சொன்னார். நம்ம நாட்டோட தேசிய வியாதியே லேட்டா வர்றது தான? அதனால மேடம் (நாந்தான்) கரெக்டா பத்து மணிக்கு போயிட்டேன். போனதும் நம்ம பேரு , ப்ளாக் அட்ரஸ் எல்லாம் எழுத சொல்லி உள்ள அனுப்பினாங்க. ஏசி ஹால்ல நிறைய பேர் உக்கார்ந்திருந்தாங்க. ஒரு குறும்படம் காமிச்சாங்க. நான் படம் முடியும் நேரத்துல போனதால அதை பத்தி எழுத முடியல.

மணி பத்தரை ஆச்சு. ஈரோடு கதிர், மகேஸ்வரன், பொதிகை செய்தி வாசிப்பாளர் அருள்மொழி மூணு பேரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிச்சாங்க. மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தான் chief  guest . தலைவர் தாமோதர் சந்துரு அருமையா நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அப்பறம் பெரிய தலைகளா பார்த்து ஒரு 15 பேருக்கு விருது வழங்கினாங்க. எழுத்துல பார்த்தவங்களை நேர்ல பார்க்கறது வித்யாசமா இருந்துது. அட இவங்களா அவங்க, அவங்களா இவங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.  சிலபேரை அங்க தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி அறிமுகம் இல்லை. இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள்.

விருது வழங்கினதும், ஸ்டாலின் சாரின் உரை. விருது பெற்றவர்களின் ஏற்புரை. பாலாசியின் நன்றியுரை. அப்பறம் எல்லா ப்ளாகர்சும் உங்களை அறிமுகப்படுத்திக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அப்பவே கால்வாசி கூட்டம் கிளம்பி வெளில போய்டுச்சு. அப்பறம் ஒவ்வொருத்தரா இன்ட்ரோ குடுத்துட்டு அவங்கவங்க பிரெண்ட்ஸ கூட்டிட்டு வெளில போய்ட்டாங்க. அப்ப பாதி கூட்டம் வெளில போய்டுச்சு.

போச்சுடா... நாம இன்ட்ரோ பண்ணிக்கறதுக்குள்ள
மீதி கூட்டமும் போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு போய் நானும் பண்ணிக்கிட்டேன். நல்ல வேளை.... நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க. (எவ்ளோ பேர்னு கேக்காதீங்க. இருந்த கால்வாசி கூட்டத்துல  கணிசமான பேர்) அதுலயும் அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் சாரும், கோகுலத்தில் சூரியன் வெங்கட் சாரும் கான்பிடன்டா சொன்னதுக்கு அவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அதுக்கப்பறம் லஞ்ச். இது குறித்த detail தகவலுக்கு சங்கவியோட பதிவு நாளைக்கு வரும். சுருக்கமா, மட்டன், சிக்கன், தலைக்கறி, முட்டை பணியாரம், எலும்பு குழம்பு, பருப்பு பாயாசம். சாப்டுட்டு வெத்தலை பாக்கு போட்டுட்டு வந்தாச்ச்ச்ச்ச்ச்.....

 வேற யாராவது பதிவு போட்ருப்பாங்க. படிக்கலாம்னு பார்த்தேன். யாரும் போடல. நம்மள மாதிரி நீங்களும் என்ன ஆச்சுன்னு எதிர்பார்த்திட்டு இருப்பீங்களேன்னு நானே பதிவை போட்டுட்டேன். போட்டோஸ் எங்கன்னு தான கேக்கறீங்க? சி.பி சார் ஒரே பதிவுல 600 போட்டோ போடறேன்னு சொல்லி இருக்கார். அவரோடதுல பார்த்துக்கங்க..