Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, August 15, 2011

'என்னத்த சுதந்திரம் வாங்கி...' கட்சியா நீங்கள்?

உங்களுக்காகத்தான் இந்த பதிவு...
 
68  வருஷத்துக்கு முன்னாடி இந்த காந்தி தாத்தா பண்ணின தப்பு சுதந்திரம் வாங்கி குடுத்தது. வெள்ளைகாரங்க ஆட்சில எல்லாம் ஒழுங்கா நடந்துட்டு இருந்துது. நம்ம ஆளுங்க பெருசா கழட்டுற மாதிரி 'சுதந்திரம் குடு சுதந்திரம் குடு' னு வாங்கி எல்லாத்தையும் வீணாக்கிட்டாங்க. இப்ப மட்டும் நாம என்னமோ அடிமை இல்லாத மாதிரி சுதந்திர தினம் கொண்டாடுறோம். இப்பவும் நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு அடிமையாதான இருக்கோம். எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, இன்னும் என்னெல்லாம் நாட்டை கெடுக்க முடியுமோ அத்தனையும் நடக்குது. இதுக்கு பேசாம ஆங்கிலேயருக்கே  அடிமையாவே இருந்திருக்கலாம். விதவிதமா வசதிகளாவது கிடைச்சிருக்கும்

                   இப்படி பேசுபவர்களிடம் பொதுவான வெறும் ஐந்து கேள்விகள். இந்த கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று பதிலளித்தால் போதுமானது. பதில்களை உங்கள் மனசாட்சி படி உங்களுக்குள் சொல்லிக்கொண்டால் போதும்
    1 . Traffic Signal லில் (எனக்கு முன் யாரும் இல்லாத நிலையில்) கோட்டுக்கு முன் என் வண்டியின் நிழல் கூட விழாது. பச்சை விழுவதற்கு முன் அல்லது 0 நொடிக்கு முன் நான் வண்டியை கிளப்புவதில்லை.
     
    2.  தியேட்டரில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நான் க்யூ முறையையே பின்பற்றுகிறேன். உதா: ரேஷன் கடை, கோவில், இன்ன பிற இடங்கள்.
     
    3. இதுவரை அரசு அலுவலகங்களில் நான் லஞ்சம் கொடுக்க மறுத்து, எவ்வளவு நாள் ஆனாலும், நேர்மையான வழிமுறையிலேயே எனக்கு தேவையான ஆவணங்களை பெற்றிருக்கிறேன்.
     
    4. கல்வியறிவு இல்லாதவர் யாரேனும் எனக்கு தெரிந்தவராக இருந்தால், அவருக்கு என்னால் முடிந்தவரை  குறைந்தபட்சம் உயிரெழுத்து மெய்யெழுத்து மட்டுமாவது கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
     
    5. என் வீட்டு குப்பையை பக்கத்து வீட்டுக்கு தள்ளி என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போலல்லாமல், நிஜமாகவே என் வீட்டை போலவே என் தெருவையும் என்னால் முடிந்த அளவு சுத்தமாக வைத்திருக்கிறேன். உதா: தெரு குண்டும் குழியுமாக  இருந்தால், அதை என் போன்ற அக்கறையாளர்களுடன் சேர்ந்தோ தனியாகவோ அடைக்கிறேன். குறைந்தபட்சம் முனிசிபாலிடியில் புகாராவது செய்கிறேன். 
     
       ஆம் என்று பதில் சொன்னவர்கள் மேற்கொண்டு புலம்பலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. (இவர்கள் புலம்புவதில்லை என்பது என் கணிப்பு)

      ஒருவேளை மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள்
      1. signal பார்த்துக்கிட்டு wait பண்ணிட்டு இருந்தா, எனக்கு நான் போற வேலை முடிஞ்ச மாதிரிதான். Moreover, நான் வெயிட் பண்ணி நின்னுட்டு இருந்தா, எனக்கு பின்னாடி இருக்கறவனுங்க போற வேகத்துல என்னை அடிச்சுபோட்டு போய்ட்டே இருப்பானுங்க.
      2. ஐயோ... க்யுவா ? அது எனக்கு அலர்ஜி. அதனாலதான் நான் எங்க போனாலும் சிறப்பு டிக்கெட் வாங்கிடுவேன். இல்லாட்டி புகுந்தடிச்சு உள்ள புகுந்துவேன். வலிமையுள்ளவருக்கே உலகம் சொந்தம்ன்னு நம்பற ஆளு நான்.
      3. கிழிஞ்சுது போங்க... காசு குடுத்தோமா வேலைய ஒரே நாள்ல முடிச்சோமா னு இல்லாம... அவனுங்க எத்தன நாள் இழுத்தடிப்பாங்க தெரியுமா? ஆபீஸ்ல லீவ் யாரு உங்க அப்பனா தருவான்? அந்த loss of pay க்கு பயந்துட்டு தான ஒரே நாள்ல காசை குடுத்து வேலைய முடிக்கறோம்
      4. என்னது? class எடுக்கறதா? நான் என் குழந்தைக்கே டியுஷன் தான் வெச்சிருக்கேன். இதுல எவன் படிச்சா என்ன? நாசமா போனா என்ன?
      5. C'mon Dude! R u Crazy? நான்? ரோட்ல வேலை செய்யறதா? நான் இன்ன கம்பெனில இன்ன வேலை பாக்கறேன். என் மானம் மரியாதை என்ன ஆகறது? இதெல்லாம்  அரசாங்கத்தோட வேலை. எதாவது  பிகர் நம்பர் வேணா கஷ்டப்பட்டு  அவனை  புடிச்சு இவனை புடிச்சு கண்டுபிடிப்பேனே  தவிர, இந்த மாதிரி முனிசிபாலிடி நம்பரெல்லாம் யாரு கண்டுபிடிச்சுட்டு இருக்கறது?
      என்று  இருந்தால்  புலம்ப தகுதி இல்லாதவர்கள் என்று உங்களுக்கே தெரிந்துவிடும். 
                 நம் அனைவருக்கும் அடிப்படை உரிமை அடிப்படை உரிமை என்று வாய் கிழிய கத்துகிறோமே... நம்மில் எத்தனை பேருக்கு அடிப்படை கடமைகள் பற்றி தெரியும்?
      1. தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்கணு ம்.
      2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதிக்கணு ம்..
      3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை பின்பற்றி நடக்கணு ம்..
      4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்கணு ம். நாட்டுக்காக தேவைப்படும்போது, சேவை செய்ய தயாராக இருக்கணு ம்.
      5. அனைவரும் சாதி, மத, மொழி, இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்கணு ம்.
      6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்கணு ம்.
      7. காடுகள், நதிகள், ஏரிகள்  உள்ளிட்ட இயற்கையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கணு ம்..
      8. அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்கணு ம்..
      9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துகளை பாதுகாக்கணு ம்..
      10. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தரணு ம்.
                      இந்த கடமைகளை ஒண்ணு ரெண்டு இல்ல, எல்லாமே பின்பற்றுபவர்கள் மட்டுமே புலம்புங்க. மத்தவங்க,  இந்த கடமை எல்லாம் செஞ்சுட்டு அப்பறம் புலம்பலாம். இந்த கடமைகளையும் செய்யும்போது அதில் நாடு சார்ந்த சுயநலம் இருக்கிறதா? நம்மை மட்டுமே சார்ந்த சுயநலம் இருக்கிறதா என்று கவனித்து செய்யுங்க. 
       
      உதாரணமா, நம்மில் பலர் கடைசி கடமையை முழு மூச்சா செய்யறோம்.அதுக்கு நாடு சார்ந்த நலனை விட, நம்மளோட குழந்தை நல்லா படிச்சா, நிறைய சம்பாதிக்கும் அப்படிங்கற எண்ணமே மேலோங்கி இருக்கும். யாருக்காவது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்து, அவர்களில் ஒருவரையாவது இராணுவ சேவை அல்லது விவசாயம் அல்லது குறைந்த கட்டணத்திலோ இலவசமாகவோ சேவை செய்யும் துறை போன்ற ஏதேனும் ஒரு துறைக்கு அனுப்ப மனம் வருகிறதா? (எனக்கு இப்போதைக்கு நினைவுக்கு வந்த துறைகளையே எழுதியுள்ளேன். உண்மையில் நிறைய துறைகள் உள்ளன. Where there is a will, there is a way). நான் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பதை விட நாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? 

      இத்தனைக்கும் இந்த பதிவை நான் உண்மையில் குறுகிய கண்ணோட்டத்தில் தான் எழுதி இருக்கிறேன். அதற்கே நாம் வெட்கப்படவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் புலம்புகிறோம்?
      இந்தியா முன்னேற தடையாக உள்ள விஷயம் ஊழல், லஞ்சம், அரசியல்வாதி கிடையாது. 

      உண்மையான காரணம் நம்மோட சுயநலம் தான்.

      எல்லாருக்கும் சுயநலம், எல்லா விஷயத்திலும் சுயநலம்.

      'எனக்கு மட்டும் முன்னுரிமை கிடைக்கணும், நான் முதல்ல அனுபவிக்கணும்'. இந்த எண்ணத்தை எப்ப மாத்துறோமோ, அப்ப தான் நம்ம நாடு பற்றி நாம பெருமைப்படும் நிலைமையை அடைவோம். 

      Anyway, சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! இந்தியனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவோம்! ஜெய் ஹிந்த் !

      Tuesday, August 9, 2011

      புத்தக கண்காட்சியில் ஒருநாள்...

      ஆச்சரியமா இருக்கு. மாசம் பத்து பதிவு போட்ட காலம் மலையேறி போனது போல ஒரு பீலிங். இந்த வருஷ பதிவு லிஸ்ட மன்த்வைஸ் பாத்தா, மாசத்துக்கு  வெறும் ஒரே ஒரு பதிவு  மட்டுமே கூட போட்டிருக்கேன். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. பதிவு எழுத ஆரம்பிச்ச புதுசுல மாஞ்சு மாஞ்சு யோசிப்பேன். எதெல்லாம் வித்யாசமா தோணுதோ, எதெல்லாம் புது அனுபவமா இருக்கோ அதெல்லாம் சகட்டு மேனிக்கு டைப் பண்ணிட்டு இருந்தேன். இந்த வருஷம் என்ன ஆச்சுன்னே தெரில... பதிவெழுத வளையவே மாட்டேங்குது. இப்பவும் புது புது அனுபவங்கள் கிடைக்குது தான். ஆனா நெட் ஓபன் பண்ணவே கடுப்பா இருக்கு.  நேர்மையா சொல்லனும்னா பின்னூட்டம் போடாட்டி நம்மள மறந்துடுவாங்கன்னே அதையாவது போடறேன். நாமதான் இப்படி ன்னு நெனச்சு என்னோட சேர்ந்து பதிவெழுத ஆரம்பிச்சவங்களோட லிஸ்ட பார்த்தா பெரும்பாலும் அங்கேயும் அதே கதை இருந்தது தான் இந்த ரணகளத்துலயும் ஒரு ஆறுதல்

      Leave it...
      By the way, எங்க ஊர்ல திருவிழா... உடனே 'பெரிய மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்த போறோம்' னு டொனேஷன் கேக்க போறேன்னு நினைச்சுக்காதீங்க . நான் சொன்ன திருவிழா 'புத்தக திருவிழா' .
      ஒவ்வொரு வருஷமும் ஆசை ஆசையா காத்துகிட்டு, காசு சேர்த்து வச்சுகிட்டு, நான் காத்திருப்பது இந்த விழாவுக்காகதான். போன 6 வருஷமா எனக்கு முழு ஸ்டால்களையும் பார்ப்பது முடியாத காரியமா இருந்துச்சு. கூட கூட்டிட்டு போற ஆளுங்க அப்படி. 'கிளம்பலாம் கிளம்பலாம்'னு என்னை இழுத்துட்டு தான் வெளில வருவாங்க. இந்த வருஷம் தான் ரெண்டு முறை போனேன். அதுவும் என்போல் கமிட்மென்ட் இல்லாத புத்தக காதலர்களுடன். திணற திணற புத்தகங்களை பார்த்து ரசித்தேன். வாங்கி மகிழ்ந்தேன். நான் பாலகுமாரனின் வாசகி. நான் முதன்முதலில் படித்த அவருடைய நாவல் 'கனவு குடித்தனம்'. சோகம்  என்னவெனில், அந்த நாவலை இன்றுவரை முழுமையாக படிக்கவில்லை. (அந்த கதைக்கு தனி பதிவு போடுகிறேன்.)
       அந்த நாவலை வாங்க மட்டும் ஏனோ இன்னும் மனம் வரவில்லை. ஒவ்வொருவருடமும் புத்தக கண்காட்சிக்கு போவேன், இந்த புத்தகம் இருக்கா என தேடுவேன், எடுத்து பார்த்துவிட்டு வைத்து விடுவேன். ஒருவேளை படித்து முடித்துவிட்டால் அந்த புத்தகத்தின் மேல் உள்ள காதல் குறைஞ்சுடுமோ? தெரியல...

      பதிவர் இராஜ ராஜேஸ்வரி ( மணிராஜ்) குறிப்பிட்டுள்ளது போல "வாசிப்பது என்பது சுவாசிப்பது. வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்" என்ற வரிக்கேற்ப பல
      சுவாசிப்பவர்களை இங்கே காண முடிந்தது...

      புத்தக திருவிழாவில், நான் கவனித்த வகையில்
      * பெரும்பாலும் பெண்கள் இன்னும் சமையல் குறிப்பு, மெகந்தி டிசைன் புத்தகங்களையே வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

      * கொஞ்சம் கீழ்தட்டு இளைஞர்கள் ஜோதிட புத்தகத்தையும், வாழ்வில் ஜெயிப்பது எப்படி என்று கேட்பது போன்ற தன்னம்பிக்கை புத்தகங்களையும் வாங்குகிறார்கள்.

      *  கவர்மென்ட் வேலை தேடுபவர்கள் பொதுஅறிவு புத்தகங்களை வாங்கி தங்களை exhibit செய்கிறார்கள்.

      * குழந்தைகளின் சாய்ஸ் கலர் அடிக்கும் புத்தகங்கள்.

      * குடும்பத்தலைவர்கள் டிவியில் பார்த்தவர்களின் படம் இருக்கும் புத்தகங்களை புரட்டி, விலையை பொறுத்து வாங்குகிறார்கள்.

      * கூட்டமான இடம் என்பதால் வயதானவர்கள் குறைவு. வந்தவர்கள் கம்பராமாயணமும் சுந்தரகாண்டமும் தேடுகிறார்கள்.

      * அதிலும் இசம் புத்தகங்கள் (அதாங்க கம்யுனிசம், மார்க்சிசம்) ம்ஹும்.... காற்று வாங்குகிறது.

      *   பொருளாதார ரீதியாக செட்டில் ஆன இளைஞர் கூட்டமே இலக்கியம் பக்கம் போகிறது. பெருமையாக 'இது இரண்டாவது முறை, மூன்றாவது முறை வருகிறேன்' என்றும், 'ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன் இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்' என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக இருந்தது... 

       தபூ ஷங்கர் போன்றோரின் கவிதைகளை ஒவ்வொரு ஸ்டாலிலும் கொஞ்சம் கொஞ்சம் படித்து புத்தகத்தை கண்காட்சியிலேயே படித்து முடித்தவர்களும் இருந்தார்கள்.

       பிரபாகரன், ஹிட்லர், சே குவேரா போன்ற புத்தகங்களை பிரித்து பார்த்து ஒரு தடவு தடவி வைத்தவர்களும் இருந்தார்கள்.

      'மச்சி... அதோ அந்த ஸ்டால்ல பிகர் கூட்டம் மச்சி. நீ இங்க என்ன பண்ற?' என்று நண்பனின் புத்தக தேடலுக்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் இருந்தார்கள்.

       'சூ... சும்மா அழ கூடாது. முதல் கடைலயே புத்தகம் வாங்கிடகூடாது. கடைசி வரைக்கும் பார்த்துட்டு எந்த கடைல கம்மியா இருக்கோ அங்க தான் வாங்கணும்' என்று கலர் அடிக்கும் புத்தகம் கேட்டு அழுத குழந்தையை சமாதானபடுத்திய  தந்தைகளும் இருந்தார்கள்.

      கலவியல் சம்பந்தமான புத்தகங்களை கூட்டம் இல்லாத ஸ்டாலின் மூலையில் நின்று யாருக்கும் தெரிந்து விடகூடாது என்ற பதைபதைப்புடன் படித்தவர்கள் இருந்தார்கள்.
      'என்ன புத்தகம் வாங்கின?' என்று கேட்கும் தெரிந்தவர்களிடம், பெருமையாக டிக்சனரியையும், அட்லசையும் காட்டும் பள்ளி செல்லும் பையன்கள் இருந்தார்கள்.
       திடீரென்று தன் பெயர் சொல்லி கூப்பிடும் தெரிந்த அக்காவின்  குரல் கேட்டு திரும்பிபார்க்கும் பெண், அந்த அக்காவுக்கும் புத்தக கண்காட்சி வரும் அளவு புத்தகத்தின் மீது ஆர்வம் இருக்கும் என தெரிய வந்த வியப்பை புருவம் தூக்கி காட்டும் வியப்பின் வெளிப்பாடும் இருந்தது.

       ஒன்றாக படித்தவர்கள், குடியிருந்தவர்கள், வேலை செய்தவர்கள் என பல பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட்டுகொண்டே இருந்தன.
      வெளியே இருந்த கேண்டீனில், அநியாய விலையில் சுகாதாரம் குறைந்த சூழலில்  ஜிகர்தண்டா, மிளகாய் பஜ்ஜி, பானிபூரி எல்லாம் சக்கைபோடு போட்டு விற்பனை ஆகிக்கொண்டிருந்தன.
       என் வாழ்வில் முதலும் கடைசியுமாய் ஜிகர்தண்டாவை ருசித்தேன். இவ்வளவு கேவலமாக இருக்கும்ன்னு நெனைக்கவே இல்லை. ஒருவேளை அதை செய்து கொடுத்தவர் சரியாக கலந்து கொடுக்கவில்லையோ என்னவோ. (இந்த லைன் ஜிகர்தண்டா ரசிகர்கள் யாரேனும் இருந்தா, அவங்களை சமாதானபடுத்த. I have no guts to taste it again உவ்வே ...   ) 

       இப்பேர்பட்ட திருவிளையாடல்கள் நடந்தேறிய எங்கள் ஊர் புத்தக திருவிழா இனிதே இன்றுடன் முடிந்தது....