Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, December 28, 2010

தமிழ்மண விருதில் ஒரு சுயேட்சைக்கு டெபாசிட் கிடைச்சுடுச்சு

'தமிழ்மணத்தில் பதிவுகள் தேர்ந்தெடுத்து விருது தரப்போறோம். உங்களுக்கு எந்த பதிவை சேர்க்க விருப்பமோ சேருங்க' னு ஒரு மெயில் வந்துச்சு. நானும் எதார்த்தமா அவங்க குடுத்த டைம் ல போஸ்ட் பண்ணின  என்னுடைய மூணு பதிவ சேர்த்தேன்.

1 . ஆத்திகத்துக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவு (சமூக விமர்சனம்)

2 . நிஜமாகவே கடவுள் இந்த உருவத்தில் தான் இருப்பாரா (சுய தேடல்)

3 . நண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை (நகைச்சுவை)

அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது இது பெரிய பெரிய ஆளுங்க போட்டி போடற இடம். நாம வேடிக்கை பாக்கத்தான் லாயக்குன்னு. அதனால நான் போட்டிக்கு பேர் குடுத்தத கமுக்கமாவே வச்சுகிட்டேன். யார்கிட்டயும்  ஓட்டும் கேக்கல. நான் பாட்டுக்கு யாருடையது பிடிச்சிருந்ததோ அவங்களுக்கு போட்டுட்டு வந்துட்டேன். இப்ப ஒரு பதிவரின் 'நன்றி' பதிவை படிச்சு பாத்துட்டு இரண்டாம் கட்ட ஓட்டுக்கு அவரோடது வந்திருக்குன்னு அவருக்கு ஓட்டு போட போய் பாத்தா ..................
...........
..............
.......................
என்னுடைய முதல் ரெண்டு பதிவும் அங்க 'present madam' சொல்லி உக்காந்திருக்கு... எனக்கு சர்ப்ரைசே தாங்கல... அதனால நானும் எனக்கு சாரி என் பதிவுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி சொல்ல இந்த பதிவ போட்டே ஆகணும் இல்லையா... அதனால விளம்பரப்படுத்தாமலே எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...

இரண்டாம் கட்டத்துக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நண்பன், ஊர்காரன், போன்ற எல்லா எல்லைகளையும் தவிர்த்து தகுதி இருக்கற பதிவுகளுக்கு ஓட்டு போடலாம் வாங்க.

சந்தேகம்: இது தமிழ்மணம் சம்பந்தப்பட்ட பதிவாச்சே. இதை மற்றவைகளில் இணைக்கலாமா?

இதற்கு பின்னூட்டம் இடும் அனைவருக்கும் நன்றிகள்.

Sunday, December 26, 2010

உங்கள் கையெழுத்தும் குணாதிசயமும்

நம்ம கையெழுத்து எப்படி இருக்கோ அப்படி தான் தலையெழுத்தும்னு  பொதுவா சொல்லுவாங்க. ஆனா, நம்ம கையெழுத்தை வச்சு நம்ம குணத்தை கண்டுபிடிக்கவும் முடியும். அதுக்கான சில குறிப்புகள் தான் இந்த பதிவு.

பெரிய எழுத்தாக எழுதுவோர்: 
 பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். 

சிறிய எழுத்தாக எழுதுவோர்: 
 எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள். 

வலப்பக்கம் சாய்த்து  எழுதுவோர்: 
எதிர்கால வாழ்வில் இன்பமாய் இருப்பார்கள். 

இடப்பக்கம் சாய்த்து  எழுதுவோர்:       
பயந்த சுபாவம் உள்ளவர்கள் , நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துவார்கள். 
 
எழுத்துக்களை நீட்டி எழுதுவோர்: 
எதிலும் பற்றற்று இருப்பார்கள்.

எழுத்துக்களை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுவோர்: 
எந்த காரியத்திலும் அசாதாரண துணிச்சலை காட்டுவார்கள்.


கிறுக்கலாக எழுதுவோர்: 
குழப்ப மனம் படைத்தவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துவர்.


கட்டமாக எழுதுவோர்: 
ஆடம்பரப்பிரியர்கள். சோம்பேறிகள்.

வட்டமாக முடிப்பவர்கள்: 
பயந்த சுபாவமுள்ள திறமைசாலிகள். 

நான் பரிசோதித்து  பார்த்த வரை பெரும்பாலும் உண்மையாகவே உள்ளது. நீங்களும் check பண்ணிக்கோங்க. (பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Friday, December 24, 2010

பதிவுலகில் பாலிடிக்ஸா? இன்னும் பிற சந்தேகங்கள்

கடை போட்டு ரெண்டு மாசமாகியும் பதிவு சம்பந்தமான பல சந்தேகங்கள் இன்னும் இருக்கின்றன. சந்தேகங்களுக்கு சமமாக குழப்பங்களும் உண்டு. இந்த சந்தேகங்களும் குழப்பங்களும் என் பதிவு சம்பந்தமாக மட்டும் இல்லை. முழு பதிவுலகம் சம்பந்தப்பட்டது. ஆனால் இந்த பதிவில்,  நாம், நம் பதிவு, நம்  பின்னூட்டம் என்றே குறிப்பிடுகிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. இந்த பதிவு போடும்போது ஏற்படும் சந்தேகங்களை இப்போது கேட்கிறேன். அவ்வப்போது தோன்றுவதை இனி ஒவ்வொரு பதிவிலும் கேட்கிறேன். இந்த சந்தேகங்களில் திமிர் போன்ற ஒரு தொனி தெரியலாம். ஆனால் சத்தியமாக அவை தெரிந்துகொள்ளும் ஆவலில் தான் கேட்கப்படுகிறது.  உதவுங்கள். (அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும் :-)    )


1 . பின்னூட்டம் போடும் அனைவருக்கும் நாமும் கண்டிப்பாக பதிலுக்கு பதில் தந்தே ஆக வேண்டுமா? ஏனெனில் நான் பார்த்த பதிவர்களின் பதிவுகளில் அப்படிதான் செய்திருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் தலைப்பில் இருந்து விலகி விடுகின்றனவே..
 (அப்படி இல்லைங்க. அது நம்ம இஷ்டம் தான். ஒருத்தருக்கொருத்தர் நேரில் பேசிக்கறதுக்கு பதிலா இப்படி பேசிக்கறோம்)

2. பதிவு சம்பந்தமான தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டம் இடாமல்,  அதற்கு பதிலாக 'உங்கள் பதிவு அருமை' 'சூப்பர்' 'நல்ல பதிவு' என்று மட்டும் பதிவிடுவதால் என்ன உபயோகம்? அந்த பதிவு பற்றிய சொந்த கருத்துகளை இரண்டொரு வார்த்தைகளில் சொல்லிவிட்டு, பாராட்டலாமே.. பாராட்டை நான் குற்றம் சொல்லவில்லை. பாராட்டு என்பது மற்றவர்களை ஊக்குவிக்கும் விஷயம். வாலி சொன்னது போல 'ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்' தான். ஆனால் வெறும் பாராட்டு மட்டும் சலிக்காமல் கேட்டுக்கொண்டிருக்க நாம் என்ன மிஸ்டர் எக்ஸா?  பாராட்டுடன் உங்கள் அனுபவ கருத்துகளையும் பதிவு செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே. (சூப்பர் சந்தேகங்க)

3 . நம் பதிவில் யார்யார் பின்னூட்டம் இடுகிறார்களோ, அவர்களுடைய பதிவில் நாமும்  பின்னூட்டம் இட வேண்டுமா? பதிவுலக சம்ப்ரதாயங்கள் பற்றி எனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. ( அது நம்ம இஷ்டம் 2 )

4 . நம் பதிவிற்கு யார் follower ஆகி இருக்கிறார்களோ அவர்களுக்கு நாமும் follower ஆக வேண்டுமா? தொழில்நுட்ப பதிவுகள் நீங்கலாக பொது தலைப்புகளில் பதிவிடுபவர்களை  குறிப்பிட்டு கேட்கிறேன். (அது நம்ம இஷ்டம் 3)

5 . சிலருடைய  ப்ளாகில் follower ஆகும் option இல்லையே. என்ன செய்வது? (போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாமே)

6 . ஓட்டு போடுவதன் பயன் என்ன? காரணம் தெரியாமலேயே நான் படிக்கும் பக்கங்கள் அனைத்திற்கும் ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறேன். நானும் ஓட்டு பட்டை வைத்துக்கொண்டிருக்கிறேன். பிரபலமாகவா? ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் நம்மிடம் சரக்கு இருந்தால் வந்து பார்ப்பார்கள் அல்லவா? Ad sense இருந்தாலாவது உபயோகம். தமிழ் பதிவர்களுக்கு அதுவும் இல்லை. பின் எதற்கு? நிஜமாகவே தெரியவில்லை. (ஓட்டு போட்டா காசு தருவாங்கன்னு தான்)

7 . நாம் எழுதும் அனைத்து பதிவுகளையும் submit பண்ணவேண்டுமா? இது போன்ற சந்தேகம், நான் விருது வாங்கிட்டேன், இத்தன பேர் என் பதிவ பாக்கறாங்க அப்படின்னு எல்லாம் நான் அப்பப்ப பதிவு போடுவேன். இந்த மொக்கை எல்லாம் கூட submit பண்ணனுமா? (ஹப்பா.. மொக்கைனு அவங்களே ஒத்துகிட்டாங்க)

8 . பல site களில் ஏதோ script கொடுத்து காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள் னு கொடுத்திருக்காங்களே. அதை design -> edit Html ல எந்த இடத்தில் பேஸ்ட் செய்யவேண்டும்? (இருக்கறதிலேயே இது ஒண்ணு தான் உருப்படியான சந்தேகம்)

9 . Last But not Least இங்கும் பாலிடிக்ஸ் உள்ளது என கேள்விப்பட்டேன். பெண் பெயரில் எழுதுபவர்கள், நண்பர்கள், ஒரே ஊர்க்காரர்கள், என இன்னும் சில காரணங்களுக்காக  ஓட்டு போடுவார்களாமே? அப்படி என்றால் கருத்துக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் இல்லையா? (அப்படியா... இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே... உடனே பேர, ஊர மாத்தறேன்)

இப்போதைக்கு இவ்வளவு தான் தோணுது. இதற்கு நீங்கள் பின்னூட்டம் இடும்போது அப்ப விளக்கம் கேட்டுக்கறேன். யாரையும் காயப்படுத்தி இருந்தால், அது நான் தெரியாமல் செய்த பிழையாக மட்டுமே இருக்கும். மன்னியுங்கள். இவ்வளவு சந்தேகம் கேட்டு, யாராவது அதற்கு விளக்கம் குடுக்காம, 'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள், ' அப்படின்னு பின்னூட்டம் போட்டுடாதீங்க....


விளக்கம் கொடுக்கும் அனைவருக்கும் முன்கூட்டியே நன்றிகள்.

Tuesday, December 21, 2010

பல்கலைக்கழக தேர்வில் ஜெயிப்பது எப்படி? (ஒரு அனுபவ அலசல் )

அடேய்.... எவன்டா அவன் எக்ஸாம கண்டுபுடிச்சவன்? அவன கூட மன்னிச்சுடுவேன்டா... எவன்டா அவன் அரியர்செல்லாம் கண்டுபுடிச்சவன்? அவன தான் என்னால மன்னிக்கவே முடியாது. கண்ணை கட்டிடுச்சு... (இவ்வளவு நாள் பதிவு எழுதாததற்கு இதுதான் காரணம் நண்பர்களே... )

ஓர் பலகலையின் தொலைதூரக்கல்வியில் என்னுடைய முதுகலையை படித்துக்கொண்டிருக்கிறேன். (அய்யய்யோ... தொடர் நிகழ்காலமாகி போயிடுமோ?) கடைசி வருடம். ஒரு பேப்பர் அரியர். அதற்காக படிக்க வேண்டியிருந்தது. உண்மையை சொல்லனும்னா படிக்கற மாதிரி சீன் காட்ட வேண்டியிருந்தது. இல்லாட்டி ப்ளாக் டைப் பண்ற விரல எங்க அம்மா ஒடிச்சுடுவாங்க. அதான் அடக்கி வாசிச்சுட்டு, இப்ப சுதந்திரப்பறவையா பறந்து வந்துட்டேன்.

நான் பரீட்சை எழுதின என் அனுபவத்தை சொல்றேன். முதல் வருடம் என்னைப்  பார்த்து  நானே ஆச்சரியப்படும் அளவு படித்தேன் (கொஞ்சம் ஓவரா இருக்கா? விடுங்க... விடுங்க ... ) அந்த வருட பரிட்சையில் சாதாரண மதிப்பெண்களே கிடைத்தன. சரி, இரண்டாம் வருடம் நல்லா டைம் எடுத்து படிச்சு percentage அதிகப்படுத்தனும்னு  நினைச்சு செமினார் வகுப்புகள் எல்லாம் கலந்துகிட்டு, (கலந்துகிட்டு. underline பண்ணிகோங்க. கவனிச்சு இல்ல)'மே மாசம் எழுதறதுக்கு பதிலா டிசம்பர்ல எழுதலாம். அப்பதான் நிறைய டைம் கிடைக்கும். இன்னும் நல்லா படிக்கலாம் 'னு இருந்தேன்.

ஆனா university ல ஒரு வித்யாசமான scheme நடைமுறையில் உள்ளது. அதாவது, எங்கள் கல்வியாண்டில் எழுதாமல், இடையில் எழுதினால், இரண்டுக்கும் அதாவது may, december இரண்டுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டுமாம். (அடப்பாவிங்களா... இப்படியா காசு புடுங்குவீங்க?) சரி காசு எப்படினாலும் கட்டறோம், ஒரு attempt ட்ரை பண்ணலாமே னு கால்குறைமனதோடு (அரைகுறையையும் விட கம்மி) எழுதினேன். 1 இல்ல , 2 இல்ல 5 பேப்பர். உலக அதிசயமா அஞ்சும் அதிக மார்க்கோட பாஸ். பர்செண்டேஜும் எகிறுச்சு.

ஆனா இப்ப மூணாவது வருஷத்துல எனக்கு பயங்கர குழப்பமா போச்சு. படிச்சு எழுதறதா இல்ல கதை விடுறதான்னு. இப்ப எனக்கு மூணு பேப்பர் தான்ங்கறதால என் சோம்பேறித்தனத்துக்கு சப்போர்ட்டா இரண்டு பேப்பர் படிக்காமலும், கடின உழைப்புக்கு சப்போர்ட்டா ஒரு பேப்பர் படிச்சும் எழுதலாம்னு முடிவெடுத்து எழுதினேன்.  ரிசல்டும் வந்தது. படிக்காமல் எழுதிய இரண்டிலும் பாஸ். படித்து எழுதிய ஒன்றில் பெயில். (என்னாங்கடா நடக்குது இங்க....) அந்த அரியர் பேப்பரைத்தான் இந்தமுறை எழுதி வந்திருக்கிறேன். நான் பெற்ற அனுபவத்தின் பயனாக 'படிக்காமல்' எழுதி இருக்கிறேன். ரிசல்ட்டை பாத்துடலாம்...

நானும் ஒவ்வொரு எக்ஸாமுக்கும் பாக்கறேன், அது என்ன மாயமோ தெரியல... ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு முந்தின நாள் அதுவும் முந்தின நைட்டு பதியற மாதிரி எப்பவும் பதியறதே இல்ல. அநேகமா இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும். யாராவது விஞ்ஞானிகள் இதற்கு விளக்கம் குடுத்தா நல்லாஇருக்கும்.

இந்த விஷயம் எவ்வளவு விசித்திரமோ அதே அளவு இன்னொரு விசித்திரமும் உண்டு.

அது என்னன்னா, நாம ஒழுங்கா படிச்சு எழுதற பரிட்சைல வாங்கற மார்க்கை  விட own ஆ கதை விடுற பரிட்சைல தான் அதிக மார்க் வாங்கறோம். இந்த அனுபவமும் பெரும்பாலானவங்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படினா திருத்தறவங்க, நம்ம creative knowledge க்குத்தான் மார்க் போடறாங்களா? நம்ம education system அ புரிஞ்சுக்கவே முடியலையே...


இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்

Monday, December 13, 2010

நீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்?

நீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்? ஒரு 20? 40? 60? நான் ஒரு மானஸ்தனை பார்த்தேன். அவன் வயது 6 முதல் 8 க்குள் தான் இருக்கும். பார்க்க பரிதாபமாய், கசங்கிய அழுக்கான உடையில், சோர்ந்த விழிகளுடன், கலைந்த தலையுடன், உண்மையில் பிச்சைகாரன் என்று எண்ணக்கூடிய அத்தனை தகுதிகளுடனும் தான் அவனை முதன்முறையாக கண்டேன்.

            இந்த பதிவை டைப் செய்யும்போது ஒவ்வொரு முறை அவன் இவன் என்று எழுதும்போது மனம் அவர் இவர் என்றே குறிப்பிடும்படி விரும்பியது.  இருப்பினும் அப்படி குறிப்பிடும்போது நம் மனம் பெரிய ஆளாக கற்பனை செய்து விடும் என்பதால் அவன் என்றே குறிப்பிடுகிறேன். 

                சனிக்கிழமை மாலை ஒரு Group discussion.  அதில் கலந்து கொண்டு நானும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அந்த பையன் உள்ளே எட்டிப்பார்த்தான். அவனை பார்த்ததும் எங்கள் மாஸ்டர் 'என்ன' என்று கேட்டார். அவன் மிக மெதுவான குரலில் 'அண்ணா... இந்த செல்போன் கவர் வாங்கிக்கங்கண்ணா... பத்து ரூபாய் தான்.' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான். நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்ததால் எனக்கு சரியாக கேட்கவில்லை. நான் நினைத்தேன், அவன் தன் குடும்ப கஷ்டத்தை சொல்லி பிச்சை கேட்கிறான் என்று. மாஸ்டர் எங்களுடன் பேசிக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து அவன் பாக்கெட்டில் வைக்க போனார்....

          அது தான் தாமதம்.... உடனே அவன் சரேலென தன் சட்டையை இழுத்துக்கொண்டு 'கவர் வேணும்னா வாங்கிகோங்க. சும்மாவெல்லாம் காசு வேண்டாம் ' என்றான். சத்தியமாக நாங்கள் எல்லாம் அதிர்ந்துவிட்டோம். இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அந்த தோற்றத்துடன் இருந்த ஒரு பையனிடம் இவ்வளவு விரைவான பதில்... சான்சே இல்ல...

         இந்த தன்மானத்தை பாராட்டவே நாங்கள் ஆளுக்கு ஒரு செல்போன் கவர் வாங்கினோம். நாங்கள் வாங்கிய போது அவனின் வியாபார சுறுசுறுப்பை மிகவும் ரசித்தோம். அந்த பையன் வெளியேறும் நேரம் எங்கள் வகுப்பு தோழி ஒருவர் தாமதமாக வந்தார். அவருக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது. அவர் தனக்கும் ஒரு கவர் வேண்டும் என்று கேட்கவே, போய்கொண்டிருந்த அவனை  மீண்டும் அழைத்து கவர் தர சொன்னோம். பணம் தரும் நேரத்தில் தோழியிடம் 10 ரூபாய் நோட்டு இல்லை. நூறு ரூபாயாக தான் இருந்தது. மாஸ்டர்," கவலை படாதீங்க. பையன்கிட்ட சில்லறை இருக்கு. அவன் கிட்டே வாங்கிக்கலாம் " என்று கூற, அவன் சில்லறை எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவனை பற்றி தோழியிடம் சொன்னேன். அவரும் வியந்து போனார். வேகவேகமாக பணத்தை அடுக்கிஎண்ணிய அச்சிறுவன் தன்னிடம் 70 ரூபாய் மட்டுமே இருந்ததை கூறினான். (90 ரூபாய் தேவை). தோழி 'இருக்கட்டும்பா. மீதிய நீயே வச்சுக்கோ' என கூற, அவன் என்ன செய்வது என்று மிக சில வினாடிகளே யோசித்து அடுத்து செஞ்சான் பாருங்க ஒரு காரியம்...

           டக்குனு 3 கவரையும் 70 ரூபாயையும்  அந்த பெண்ணின் டேபிள் மேல் வைத்துவிட்டு விடுவிடுவென கிளம்பினான். சத்தியமா எல்லாரும் freeze ஆயிட்டோம். சட்டென முதலில் சுதாரித்த மாஸ்டர் அவனை பிடித்து நிறுத்தி அந்த பெண்ணை சில்லறை வாங்கி வந்து கொடுக்க வைத்தார். உண்மைல இத்தன வருஷ வாழ்க்கைல நான் இந்த மாதிரி ஒரு யோக்கியன சந்திச்சதே இல்ல. அந்த நிமிஷம் வரை என்மேல் எனக்கு ஒரு பெருமை இருந்தது. நானும் business செய்வதால் மற்றவர்களுக்கு மீதி காசு தரும்போது பைசா சுத்தமாக தந்துவிடுவேன். (பெரும்பாலும் மற்றவர்கள் amount ஐ round செய்து  விடுவார்கள்.) நான் சகல வசதிகளுடன் இருக்கிறேன். நான் நியாயமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த சிறுவன், அவ்வளவு வறுமையிலும் நேர்மையாக இருக்கிறானே... அடுத்தவர் சொத்துக்கு ஆசை படாமல்... அது தான் நேர்மை. அது தான் நியாயம்.

           இதன் பின் தலைவர் பற்றிய விவரங்கள் கேட்டோம். பெயர் நாசர். அரசு பள்ளியில் படிக்கிறார். (வகுப்பு மறந்துவிட்டது. இரண்டாவதோ மூன்றாவதோ. ) சனி ஞாயிறு அன்று இவர்தான் விற்பனை பிரதிநிதி. மற்ற நாட்களில் அப்பா வியாபாரத்தை பார்த்துக்கொள்வார்.

                 இப்பேற்பட்ட நபரை நான் வாழ்வில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள மொபைலில் படம் பிடித்தேன். 'எங்கே.. காட்டுங்கக்கா...' என்றான். மீண்டும் எடுத்து காட்டினேன். மகிழ்ந்தான். கொஞ்சம் வெளிச்சமும் தரமும் போதவில்லை. அநேகமாக அடுத்த வாரமும் வருவான் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
 இது தான் அந்த மானஸ்தனின் போட்டோ:



ஒரு பத்து ரூபாய் பொருளுக்கு தன்மானத்தை இழக்க விரும்பாத இந்த பையன் எங்கே.... பல கோடி ரூபாய்க்கு மானத்தோடு சேர்ந்து எதையும் விற்க தயங்காத அரசியல்வாதிகள் எங்கே...


இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Wednesday, December 8, 2010

ஏ டண்டணக்கா.... ஏ டணக்குணக்கா...

         எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ரைமிங் இது. காரணம் நான் ஏதாவது பந்தா பண்ணிக்கணும்னா, அந்த விஷயத்தை சொன்ன பின்,  நான் இதை சொல்லி தான் முடிப்பேன். கொஞ்ச நாட்களாக தான் இந்த பழக்கம். இப்ப ஏன் சொல்றேங்கறீங்களா? அழகு குறிப்பு பற்றிய போஸ்ட் இன்ட்லி ல பிரபலமானவைல  வந்திருக்காம். மெயில் வந்துச்சு... எப்பவும் பதிவுல என் 'முதல்' சந்தோஷத்தை உங்க கூட தான பகிர்ந்துக்குவேன்... அதான் இப்பவும் பகிர்ந்துகிட்டேன். இப்ப சொல்லுங்க ...

ஏ டண்டணக்கா.... 
ஏ டணக்குணக்கா... 

ஸ்ஸ்ஸ்ஸ் .... யாரப்பா அங்க? இந்த Girls dress ல எல்லாம் காலர் வைக்க மாட்டாங்களா?
 போகற போக்க பார்த்த 'இப்பவே கண்ணை கட்டுதே' பதிவுல வெங்கட் சொன்னது போல ஆட்டோகிராப் போட வேண்டி வந்துடும் போல இருக்கே...


(ஹி ஹி ஹி. பழம் தின்னு கொட்ட போட்டவங்க எல்லாம் இந்த பதிவை படிப்பீங்க. அவங்கெல்லாம் பொழச்சு போறா சின்ன பொண்ணு னு விட்ருங்க ப்ளீஸ் )

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கும் வாழ்த்துசொல்றவங்களுக்கும்  முன்கூட்டியே நன்றிகள்.


.

Monday, December 6, 2010

ஏற்கனவே அழகா இருக்கறவங்க இதை படிக்க வேண்டாம்.

                     எண்ணை சருமம் கொண்டவர்களுக்கு எப்போதும் முகத்தில் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை அதிகம். அதற்கு காரணம் அழுக்குகளும் இறந்த செல்களும். நார்மல் ஸ்கின் உள்ள முகத்தில் உள்ள அழுக்குகளை விட ஆயில் ஸ்கின் உள்ள முகங்கள் விரைவில் அழுக்கடையும். எனவே தான் முகப்பரு, கரும்புள்ளிகள், ப்ளாக்ஹெட்ஸ், எண்ணை வடியும் முகம் என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க சில டிப்ஸ்.

First Step :
                       எந்த ஒரு அழுக்கையும் முகத்தில் இருந்து எடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது நம் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகளை OPEN செய்வது. இதற்கு நாம் ஆவி பிடிக்க வேண்டும் (உடனே சுடுகாட்டுக்கு சுற்றுலா செல்லாதீர்கள். நான் சொல்வது நீராவி). கொதிக்க வைத்த நீரில் முகம், கழுத்து, மூக்குப்பகுதி ஆகியவற்றில் நன்கு படுமாறு ஆவி பிடியுங்கள். நன்கு வியர்த்தும், ஆவி முகத்தில் பட்டும் வெளிவரும் நீரை நல்ல காட்டன் துணியால் அழுத்தி துடைத்துக்கொள்ளுங்கள்.

Second Step:
                       ஒரு சேப்டி பின்னை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின் பக்கம் உள்ள வட்டத்தின் நடுவில் black head இருக்குமாறு வைத்து, அதை கொஞ்சம் இலேசாக அழுத்தி பலமுறை வெளிப்பக்கமாக தள்ளவும். ஒவ்வொருமுறை தள்ளும்போதும், blackhead இல் இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக முடி போல் அழுக்கு வெளியே வருவதை காண்பீர்கள். இப்படி ஒவ்வொரு அல்லது ஒரே பக்கமாக வெளிவரும் தன்மையுள்ள blackhead களையும் அழுத்தி அழுத்தி வெளியேற்றுங்கள்.  (ஜாக்கிரதை. மிக அழுத்தமாக அழுத்தி எடுத்தால், முகத்துளை பெரிதாகிவிடும்)
                       ப்யூட்டி பார்லர்களில் இதையே தான் கொஞ்சம் வேறு விதமான (மேலே உள்ள படத்தில் உள்ள) ஊசியை வைத்து செய்கிறார்கள். வெளியில் வர அடம் பிடிக்கும் அழுக்கை நுனியில் உள்ள ஊசியால் குத்தி பின் அழுத்தி வெளியேற்றுகிறார்கள். இதே பொருளை வைத்து இதே வேலை தான் முகப்பருவுக்கும் செய்கிறார்கள். ஆனால் முகப்பருவை பொறுத்தவரை அது அதிகமாகி விடும் அல்லது வீங்கிவிடும்  என்று நான்  அஞ்சுவதால், பர்சனலாக  நான் அதை சப்போர்ட் செய்யவில்லை.  (பயப்படாதவர்கள் செய்து பார்க்கலாம். உங்கள் இஷ்டம்)

Third Step:
               பின் மூல்தானி மிட்டி போட்டுக்கொள்ளுங்கள். அது எண்ணைபசையை உறிஞ்சிக்கொள்ளும். (இது மூல்தான் என்னுமிடத்தில் உள்ள களிமண். கடைகளில்  கிடைக்கும்)

Last Step: 
                  இப்படி முகத்துளைகளை விரிவடையச்செய்து, அழுக்குகளை வெளியேற்றிய பின், அந்த துளையை மூட வேண்டும். இல்லாவிட்டால் அது இன்னும் அதிக அளவில் அழுக்குகளை சேகரித்துக்கொள்ளும். எனவே விரிவடைய வெந்நீர் உபயோகித்தது போல, முகத்துளைகளை மூட ஐஸ் கட்டி அல்லது ஐஸ் வாட்டர் உபயோகித்து முகத்தை கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை  செய்யலாம்.

    
               இவை தவிர, சுத்தமான தேனை தினமும் முகத்தில் தடவி வந்தால்  நல்ல பலனை அடையலாம். வேப்பங்கொளுந்தை அரைத்து தடவினாலும் அது நல்ல ஆன்டிசெப்டிக்காக செயல்படுகிறது. சுத்தமான நீரைஅதிகமாக குடித்து வந்தால் முக அழகு சம்பந்தமான பிரச்சனைகள் மட்டுமல்ல, உடல் ரீதியான பிரச்சனைகளும் பெருமளவில் சரியாகிறது. அனுபவத்தில் அனைவருக்கும் உபயோகித்து பார்த்த பின்பே இந்த பதிவை இடுகிறேன். ஸோ தாராளமாக ட்ரை பண்ணலாம்.

ஏற்கனவே அழகா இருக்கறவங்கனு குறிப்பிட்டதால் அநேகமாக அதிகமாக பின்னூட்டம் வராது னு நினைக்கறேன். ;) இருப்பினும்  இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Friday, December 3, 2010

திருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)

திருக்குறள் ஒண்ணும் புரிஞ்சுக்க கஷ்டமான மொழி நடையில நம்ம தலைவர் திருவள்ளுவர் எழுதல. ரொம்ப ஈசியாதான் எழுதி இருக்கிறார். கொஞ்சம் முயற்சி செஞ்சு ஆர்வத்துடன் கவனிச்சா, ஒரே தடவையில அர்த்தம் பதிஞ்சு போகுது. இந்த தளத்துல நிறைய பெரியவர்கள் இதுவரை கொடுத்துள்ள அளவுக்கு திருக்குறள் விளக்கம் எதிர்பார்க்காதீங்க. ஒரு சாதாரண ஆளா, சாதாரண முறையில என் சிற்றறிவு புரிஞ்சுகிட்ட விதத்தில விளக்கம் குடுக்கறேன். முடிஞ்சவரைக்கும் விரிவா இல்லாம, சுருக்கமா தர முயற்சிக்கறேன். உங்களுக்கும் எளிதா புரியும்.
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
அதாவது: கடவுள் தான் எல்லாத்துக்கும் அடிப்படை

2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

அதாவது: கடவுளை கும்பிடாட்டி படிச்சும் வேஸ்ட்டு

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

அதாவது: கடவுளை நினைச்சுட்டே இருந்தா சாகாம ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


அதாவது:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளை சேர்ந்தா No Problem at all.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 


அதாவது: கடவுளை உண்மையா விரும்பினா பாவம் புண்ணியம் எல்லாம் பிரச்சனை இல்ல

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
   நெறிநின்றார் நீடுவாழ் வார்

அதாவது: கண்டதையும் பண்ணாம கண்டிப்போட  இருந்தா 'கன்' மாதிரி இருக்கலாம்.


7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
   மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது: கடவுள்கிட்ட சரணாகதி அடையாதவங்க கவலை பட்டுகிட்டேதான் இருப்பாங்க

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.

அதாவது: கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான். ஆனா கைவிட்ருவான்

9. கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

அதாவது: 'தல' யை (கடவுளை) வணங்காட்டி தலையே வேஸ்டு 

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்.

அதாவது: ஆண்டவனையே நினைச்சா அடுத்த பிறவியே கிடையாது.

11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
      தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

அதாவது: மழை தான் அமிர்தம்

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
      துப்பாய தூஉம் மழை.


அதாவது: மழை தான்  உணவு 

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து 
      உள் நின்று உடற்றும் பசி 


அதாவது: மழை மட்டும் இல்லாட்டி பசி நம்மள வாட்டிடும்

 14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
      வாரி வளங்குன்றிக் கால்

அதாவது: மழை பெய்யாதுனா உழவர் உழ மாட்டார்


15. கேடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
      எடுப்பதூவும் எல்லாம் மழை

அதாவது: கெடுப்பது - கொடுப்பது ரெண்டுமே மழை தான்.


16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
     பசும்புல் தலைகாண்பு அரிது.
அதாவது: மழை இல்லாட்டி ஓரறிவுள்ள புல்கூட முளைக்காது.
 
17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
     தான்நல்கா தாகி விடின்
அதாவது: மழை இல்லாட்டி கடலும் வத்திடும்

18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
     வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
அதாவது: மழை இல்லாட்டி தேவர்களுக்கு பூஜையும் கிடையாது, ஒண்ணும் கிடையாது...

19. தானம் தவம்இரண்டும்  தங்கா வியன்உலகம்
      வானம் வழங்கா தெனின்.
அதாவது: மழை இல்லாட்டி மத்தவங்களுக்கான தானமும், தனக்கான தவமும் செய்ய முடியாது.


20. நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
      வான்இன்று அமையாது ஒழுக்கு.
அதாவது:
தண்ணி இல்லாட்டி எப்படி உலகம் இல்லையோ அதே போல மழை இல்லாட்டி யாரும் ஒழுக்கமா இருக்க முடியாது. 

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
      வேண்டும் பனுவல் துணிவு.
அதாவது: பற்றில்லாதவங்கள பெருமையா சொல்றதே நூல்களுக்கு துணிவு. 

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
     இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

அதாவது:  பற்றில்லாதவங்கள பெருமையோட எண்ணிக்கையும் இதுவரை பிறந்து இறந்தவங்க எண்ணிக்கையும் சமம் 

23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
      பெருமை பிறங்கிற்று உலகு
அதாவது: 
ஆராய்ந்து தெளிந்து அறத்தை மேற்கொண்டால் பெருமை. 


24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
      வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
அதாவது: ஐம்புலன்களை அறிவால அடக்கினவன் வீடுங்கற உலகத்துக்கு விதை போன்றவன் 
(Sorry Friends. இந்த குறளை என் ஸ்டைல்ல   சுருக்கமா விளக்க முடியல. ) 


25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
       இந்திரனே சாலுங் கரி.
 
அதாவது: ஐம்புலன்களை அடக்கினவனுக்கு உதாரணம் இந்திரன் தான்  

26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
       செயற்கரிய செய்கலா தார்.
அதாவது:
முடியாததை முடிச்சு காட்டுறவன் தான் பிஸ்தா  

27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
      வகைதெரிவான் கட்டே உலகு.
அதாவது:
ஐந்து புலன்களின் வேலையின் வகையை அறிந்தவனிடம் உலகம் உள்ளது.


28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
     மறைமொழி காட்டி விடும்.
அதாவது:
ஒருத்தரோட வாக்கின் பெருமைய அவங்க சொல்லிட்டு போன வார்த்தைகளே காட்டிடும் 

29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
      கணமேயுங் காத்தல் அரிது.
அதாவது:
  நல்ல குணத்தை எல்லாம் மலை மாதிரி வெச்சிருக்கற  நல்லவன் ஒரு செகண்ட் கோபப்பட்டாலும் கோபப்படுத்தினவன் முடிஞ்சான் 

30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
      செந்தண்மை பூண்டொழுக லான் 

அதாவது: எல்லோர்கிட்டயும் அருளோட இருக்கறவன்தான் அந்தணன் (ஐயர் as well as Higher) 

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
      ஆக்கம் எவனோ உயிர்க்கு.
அதாவது:
சிறப்பும் செல்வமும் கிடைக்க அறவழியே நல்லது. 

32.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
      மறத்தலின் ஊங்கில்லை கேடு
அதாவது:  அறம் தான் top. அதை மறந்தா flop  

33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
     செல்லும்வா எல்லாஞ் செயல்
அதாவது: விடாமல் அறச்செயலை செய்யணும்

34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
    ஆகுல நீர பிற.  

அதாவது: அப்பழுக்கில்லாத அறத்தை பின்பற்றுபவனே அறன். மத்ததெல்லாம் வெறும் ஆரவாரம் 

35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம்
   
 அதாவது: அறம்னா வேற ஒண்ணும் இல்ல, பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இது நாலும் இல்லாம இருக்கறது தான்.


36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
      பொன்றுங்கால் பொன்றாத் துணை

அதாவது: வயசுப்பசங்களா இருக்கறப்பவே அற வழில போங்க. வயசான காலத்துல பார்த்துக்கலாம்னு விட்ராதீங்க.

37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிபை
      பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
 
அதாவது:  பல்லக்குல போறவனுக்கும், பல்லக்கு தூக்கறவனுக்கும் அறத்தின் பயனை விளக்காதீங்க. ஏன்னா, அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறதுதான் அறம்



38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
        வாழ்நாள் வழியடைக்குங் கல்
அதாவது:  தினமும் செய்யும் அறம், அடுத்தடுத்த பிறவி வருவதை அடைக்கும் கல்லாகும்


39. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
      புறத்த புகழும் இல
அதாவது: அறவழியில வர்றது தான் ஒரிஜினல் புகழ். ஒரிஜினல் இன்பம். 


40.  செயற்பால தோறும் அறனே ஒருவற்கு
உயற்பால தோறும் பழி
அதாவது: எவ்வளவு முடியுமோ அவ்ளோ முயற்சி பண்ணி அறம் செஞ்சுக்கோ. அதே சமயம் பழி வராம காத்துக்கோ. 



41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்


நல்லாற்றின் நின்ற துணை
அதாவது: குடும்பஸ்தன்னு யார சொல்வாங்க? அவன மையமா வெச்சு வாழும் பெற்றோர், மனைவி, குழந்தைக்கு துணையா இருக்கறவனை தான்.

43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
அதாவது: முன்னோர்களையும், தெய்வத்தையும் , விருந்தாளிங்களையும், சொந்தக்காரங்களையும் கூடவே தன்னை தானும் அறநெறி தவறாமல் போற்றுவது இல்லறத்தானின் சிறந்த கடமை.
44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்
அதாவது:சமுதாயத்துக்கு அஞ்சி நியாயமா வாழ்ந்தா குடும்ப வாழ்வில குறைவு இருக்காது.


45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
     பண்பும் பயனும் அது.
அதாவது: குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

 
(இந்த போஸ்ட் வாரத்துக்கு ஒரு முறை குறளுக்கு விளக்கம் எழுதும்போது update ஆகிக்கிட்டே இருக்கும். )


.

Thursday, December 2, 2010

அனைவருக்கும் நன்றி !

பதிவுலகில் உண்மையில் நேற்று எனக்கு செம BIG Day! ஒரே  நாளில் நான் மூன்று முறை சந்தோஷப்பட்டேன். 

ஆம்...

          நான் பதிவெழுத ஆரம்பித்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் என் பக்கம் 3000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அதுல ஒரு 500 தடவை நானே பார்த்திருப்பேன், friends க்கு  காமிச்சிருப்பேன்னு வைங்க... மீதி தடவை எல்லாம் மற்றவர்கள் பார்த்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நன்றி நண்பர்களே...

 இரண்டாவது சந்தோஷம் எல்.கே கொடுத்த விருது.
 மற்றுமொரு சந்தோஷம் அருண் பிரசாத் என்னை வலைசரத்தில்  அறிமுகப்படுத்தியது..
        
             இவர்கள் இருவரும் என் பதிவை விருது தரவும், அறிமுகப்படுத்தவும் தகுதியானது என எண்ணியதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.எல்.கே வுக்கு கொடுத்த பின்னூட்டத்தையே நான் மீண்டும் குறிப்பிடவிரும்புகிறேன். தத்தி தத்தி நடக்கும் குழந்தையை, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வந்ததுபோல் சுற்றத்தார் உற்சாகப்படுத்துவது போல் தான் இந்த நண்பர்களும் எங்களை (விருதும் அறிமுகமும் பெற்ற என் போன்ற மற்ற பதிவர்களை) ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி எல்.கே.   நன்றி அருண்..

           நான் ரொம்ப சாதாரணமான ஆள். எனக்கு உங்கள் அனைவரின் ஊக்கம் ரொம்பவே நெகிழ வைக்கிறது. நன்றி என்பது உணர்வு பூர்வமானது. எனவே நன்றிகளை வார்த்தைகளில் சொல்ல முயற்சித்து டைப் செய்தால் இவ்வளவுதான் பதிவிட முடிகிறது. .

(பின்குறிப்பு: நானும் விருது வாங்கிட்டேன்... நானும் விருது வாங்கிட்டேன் னு அவார்ட மேலே வச்சு கொஞ்ச நாள் சீன் போட்டுக்கறேனே...)


.

Wednesday, December 1, 2010

பதிவர் சாதாரணமானவள் கோர்ட்டுக்குப் போனார்

            என் இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக நான் நேற்று கோர்ட் வாசல்படியை மிதிக்க வேண்டியதாக போய் விட்டது. என் குடும்பத்தில் யாரும் இப்படி கோர்ட்டுக்குச் சென்றதில்லை. எல்லாம் என் தோழியால் வந்தது...

                     நானும் என் தோழியும் துணி வாங்குவதற்காக கடைவீதி சென்றோம். அவள் வண்டியில் தான். அவள் தான் ஓட்டினாள். நான் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் 'தேமே' என பின்னால் உட்கார்ந்திருந்தேன். துணிக்கடைக்கு தான் போவாள் என்று இருந்தால், திடீரென ஒரு Beauty Parlour முன் வண்டியை நிறுத்தினாள். தன் புருவத்தை பார்லரில் சரி செய்துகொண்டு, அடுத்து துணிக்கடை செல்லலாம் என்றாள். சரி என்று உடன் சென்றேன்.

                       அந்த பார்லரம்மா துணை தொழிலாக ஆள் பிடிக்கும் வேலையை செய்வார் போல் இருக்கிறது. (அதாங்க M.L.M). காத்திருக்கும் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து இதை படிங்க என்றார். அதில் செல்பேசி உபயோகிப்பவர்களை பாதுகாக்கும் நோக்கோடு சிம் கார்டை விட சிறிய தகடு ஒன்றை போனில் சொருகிக்கொண்டால் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து  தப்பிக்கலாம் என்று எழுதி இருந்தது.

                    அவங்க புத்தகத்த குடுத்த மரியாதைக்காக அந்த தகட்டின் விலை பற்றி விசாரித்தேன். விலை ஆயிரம் ரூபாயாம்.உங்க போன்ல வச்சிருக்கீங்களான்னு கேட்டேன். அவங்க தெளிவா  'நான் புது போன் மாத்தி 2 நாள் தான் ஆச்சு. பழைய போன் ல இருக்கு. புதுசுக்கு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்' னு சொன்னாங்க.  ஆஹா அவங்களா நீங்க னு மனசுல நெனச்சுகிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்.

             ஆண்களே... உங்களுக்கு ஒரு டிப்ஸ். . பெண்களுக்கு நாங்கள் அழகாக இருப்பது தெரிந்துவிட்டால், கண்டிப்பாக அதை சோதித்துப்பார்ப்போம் எத்தனை பேர் நம்மை பார்க்கிறார்கள் என்று. பெரும்பாலும் இதை பா.செ.முன், பா.செ.பின் என இரண்டு வகைக்குள் அடக்கி விடலாம். அதாவது பார்லர் செல்வதற்கு முன், பார்லர் சென்ற பின் :-)

             தோழியின் புருவம் இப்போது நல்ல வடிவமைப்போடு இருந்ததால் இப்போது அவளுக்கு தன்னம்பிக்கை ஏறி இருந்தது. அது என் துரதிர்ஷ்டம். எனவே அம்மணி தன் அழகை செக் செய்ய அடுத்து சென்றது தாலுகா ஆபீஸுக்கு.. இங்க எதுக்கு வந்தன்னு கேட்டேன்.பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதிவு பண்ணிவிட்டு 5 நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என்றாள். அவள் பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதில் பார்வையாளர் கணக்கெடுப்பு செய்கிறாள் என்று பின்புதான் தெரிந்தது. என் வாழ்வின் மிக முக்கியமான நேரம் நெருங்கிக்கொண்டிருப்பது தெரியாமல், நானும் போய் ஒரு அப்ளிகேஷன் வாங்கி என் பையில் வைத்தேன்.

            அப்படியே ஒரு அரைமணி நேரம் சென்றது. அவள் நடந்த நடைக்கு அவளின் செருப்பும் அறுந்தது. அவள் ஆர்வமும் பொசுக்கென போய்விட்டது. எனவே இப்போது கடுப்புடன் வேகவேகமாக தன் வேலையை முடித்துக்கொண்டு வண்டியில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள். அடுத்ததாவது அவள் துணிக்கடை போவாள் என்று நம்பி, நான் பின்னால் ஏறி அமர்ந்தேன்.

ஆனால்......

அவள் அழைத்துச்சென்றது....

மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு....

எனக்கு அது நீதிமன்றம் என்றே தெரியவில்லை. அந்தக்கால கட்டிடக்கலையுடன் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. அதுவும் ஏதோ அரசாங்க அலுவலகம் போல் தான் என்றெண்ணி உள்ளே சென்ற பின்புதான் தெரிந்தது அது ஒரு கோர்ட் என்று. மனம் நடுநடுங்கி போய் விட்டது. என் குடும்பத்தார் யாரும் செல்ல துணியாத ஒரு இடம்... நான் கோர்ட் நடுவில்.... எல்லாம் என் தோழியால் வந்தது.

சொல்ல மறந்து விட்டேனே... அவள் ஒரு வழக்குரைஞர்.

அதன் பின் அங்கும் அவள் வேலையை முடித்துக்கொண்டு, துணிக்கடை சென்று துணி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். (செம experience இல்ல)

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்குமுன்கூட்டியே நன்றிகள். கடுப்பாகாமல் பின்னூட்டம் இருபவர்களுக்கு இன்னும் நன்றிகள்.