Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, November 28, 2010

எதன் எல்லை எது? (சும்மா ஜாலி புதிர்)

எதை பற்றி எழுதுவது என்ற குழப்பத்தில் கடந்த சில நாட்களாக பதிவிட முடியவில்லை. நேற்றுதான் Blog போட ஒரு matter கிடைத்தது. ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஏதாவது ஒரு எல்லை இருக்கும் அல்லவா... அது என்னவாக இருக்கும் என்பதை கொஞ்சம் நகைச்சுவையோடும்  அதே சமயம் 'அட அதுவும் உண்மைதான்' என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்த ஒரு பேப்பரை படிக்க நேர்ந்தது.
உதா:
HEIGHT OF FASHION: வேஷ்டியில் ஜிப் 

இது போன்ற சில கேள்விகளை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள அதை இங்கே பதிவிடுகிறேன். ஆனால் கேள்வி மட்டும். விடை உங்களின் வித்யாசமான சிந்தனைகளை கண்ட பின்.

கேள்விகள் :
1 HEIGHT OF SECRECY?
2 HEIGHT OF ACTIVE LAZINESS?
3 HEIGHT OF LAZINESS?
4 HEIGHT OF CRAZINESS?
5 HEIGHT OF FORGETFULNESS?
6 HEIGHT OF STUPIDITY?
7 HEIGHT OF HONESTY?
8 HEIGHT OF SUICIDE?
9 HEIGHT OF DEHYDRATION?
10 HEIGHT OF HOPE?

கேள்வியை ஆங்கிலத்தில் தருவதற்கு மன்னிக்கவும். சில வார்த்தைகளை தமிழில் எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை. craziness-stupidity இவை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்துவது என்று சில பல குழப்பங்களால், ஆங்கிலத்திலேயே தருகிறேன். பதில் தமிழிலேயே இருக்கலாம்.


.

Thursday, November 18, 2010

பணம் தின்னிகள் பற்றிய வயித்தெரிச்சல் பதிவு

பூ வாசத்தையும் ஊதுபத்தி வாசத்தையும் எப்போதாவது துர்நாற்றமாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்களும் இழவு வீட்டுக்கு சென்றிருப்பீர்கள். எனக்கு பிடித்த அத்தை ஒருவர், Bank Employee, பாத்ரூம் சென்றபோது Pressure அதிகமாகி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடைசியில் அநியாயமாக இறந்து போனார். அவர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவமனை கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற நான்கெழுத்து மருத்துவமனை. ஈரோடு கிளை. ஆனாலும் அங்கே உயிருடன் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வரும்போது உயிருடன் பெரும்பாலும் வரமாட்டார்கள்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என் அம்மா வழி மாமா ஒருவருக்கு நெஞ்சு வலி வந்தது. இது பிரபலமான மருத்துவமனை என்பதால் கொண்டுபோய் சேர்த்தார்கள். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு விட்டது என்றார்கள், ஆபரேஷன் செய்யவேண்டும் என்றார்கள், ஊசி போட வேணும் என்றார்கள்.. (ஒரு ஊசியின் விலை 25,000.) இன்னும்  பல டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என்றார்கள்... சில டெஸ்ட்டுகள் எடுத்தார்கள்.. நிலைமை சீரியஸ் என்றார்கள்...  ஸ்பெஷலிஸ்டுகள் வரவேண்டும் என்றார்கள்... என்னென்ன கதை அடிக்க முடியுமோ அத்தனையும் அடித்தார்கள்.

பார்த்தார் அவர் மகன்! இங்கே ஆகும் செலவை தாக்குபிடிக்க முடியாது என்று சென்னைக்கு கூட்டி செல்ல முடிவெடுத்தார்.  (ஒரு முன்னணி தனியார் தொலைகாட்சியில் கேமரா மேனாக மாமா மகன் இருப்பதால், சென்னை அரசு மருத்துவமனையில் ஏதோ concession உண்டாம்.) அப்போது பார்க்க வேண்டுமே... இந்த மருத்துவமனை ஊழியர்களின் அடாவடியை. மாமாவை விடவே மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். நான் கூட நெகிழ்ந்து போனேன். பேஷன்ட் மேல் இவ்வளவு பாசமா என்று. ஆனால், மாமா மகன் 'வச்சுகோங்க. ஆனா காசு ஒரு பைசா கூட தர மாட்டோம்' என்று சொன்னதும் தான் விட்டார்கள். (வடை போச்சே...) பின்னர் சென்னைக்கு கூடி வந்து பரிசோதித்ததில் தான் தெரிந்தது அது வெறும் வாயு தொந்தரவு என்று.

இன்னுமொரு உதாரணம்... எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் 93 வயதான தந்தையும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால், அவசரத்திற்கு என்று அதே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அப்பாவின் நண்பர் தைரியசாலி, வர்மக்கலை அறிந்தவர், மருத்துவ முறைகளையும் ஓரளவு அறிந்தவர் (மருத்துவம் அல்ல). இந்த முறை நடந்த கூத்து இன்னும் அருமை. முதலில் வைத்தியம் செய்த மருத்துவர் எதற்கோ லீவ் எடுக்க, மருத்துவமனையில் பேஷண்டுக்கு வைத்தியத்தை தொடர வந்தவர் ஒரு கிட்னி specialist. என்னடா இது கேனத்தனமா இருக்கே என்று நண்பர் கேட்க, என்னென்னமோ சமாளித்திருக்கிறார்கள். இவர் நோண்டிநோண்டி கேட்கவும் 'பார்ட்டி தெளிவாக இருக்கிறார் என்று விட்டு விட்டார்கள்'. அதன் பிறகும் ஏனோதானோவென்ற வைத்தியம் தொடர்ந்திருக்கிறது. நண்பர் அங்கிருந்து எப்படியோ வெளியே வந்து வேறு டாக்டரிடம் காட்டி சரிசெய்திருக்கிறார்கள்.

தீபாவளியன்று கீழே விழுந்த அத்தையை, அன்று வேறு மருத்துவமனைகள் விடுப்பாக இருந்த காரணத்தினால் மேற்கூறிய பெருமை வாய்ந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். விலைஏற்றத்தால் இந்த முறை ஊசி விலை 45000 . இருப்பினும் கொடுத்தார்கள். வேலைக்காகவில்லை. அத்தை எங்களை விட்டு போய்விட்டார்.

அதிகமாக fees வாங்கினால் தரமான மருத்துவமனை என்று எந்த முட்டாள் சொன்னது? ஒரு முட்டாள் சொல்லி இருப்பான். ஒரு லட்சம்  முட்டாள்கள் அதை follow செய்கிறார்கள்.
இனியாவது கௌரவத்துக்காக செலவு செய்யாமல், ஒரு மருத்துவமனையில் சேர்க்கும் 
முன், ஏற்கனவே அந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் அனுபவத்தை கேட்டு விட்டு சேருங்கள். ஏனென்றால், தவறான தேர்ந்தெடுப்பால் வீணாவது பணம் மட்டும் அல்ல, உயிரும் கூட தான்....

(பிரிவின் வேதனையில் இருப்பதால், இந்த பதிவில் கொஞ்சம் தெளிவு இல்லை தான். மன்னியுங்கள் நண்பர்களே)





.

Thursday, November 11, 2010

விலங்குகள்உருவத்தில் கடவுளை வழிபடுவது ஏன்?

              சாமி கும்பிடுபவர்கள் மட்டும் படித்தால் போதுமானது. இது அவர்களுக்கான பதிவு மட்டுமே.. மற்றவர்கள் இதை படித்து உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.           கடவுளின் உருவ வழிபாட்டை பற்றி எழுதிய போது இதை டைப் செய்து வைத்தேன். ஆனால் இந்த பதிவை post செய்ய மனம் வரவில்லை. அரைகுறை மனதுடன்தான் post செய்கிறேன். பெரியார் கூட மூட நம்பிக்கைகளை தான் வெறுத்தாரே தவிர கடவுள் வழிபாட்டுக்கு தடை விதிக்கவில்லை. அதனால் தான் அவர் ஈரோட்டில் உள்ள 2 , 3 கோவில்களுக்கு கமிட்டி மெம்பராக இருந்திருக்கிறார். மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் சாமி கும்பிடும்போது 'பெரியவங்க சொல்லி இருக்காங்க' என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துகொண்டு கும்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு 'ஏன் சொல்லி இருக்கிறார்கள்' என்று சொல்ல முயற்சித்தது தவறா? நான் என்னை ஆத்திகர் என்று குறிப்பிட்டிருக்க கூடாது என நினைக்கிறேன். ஓகே. mind ல வச்சுக்கறேன். அப்பறமா use பண்ணிக்கறேன்.  விஷயத்திற்கு வருவோம். 

விலங்குகள்உருவத்தில் கடவுளை வழிபடுவது  ஏன்?
          
            கடவுள் எந்த உருவத்தில் இருப்பார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் இந்த விலங்குகளின் முகங்களை வேறு கடவுள் உடலோடு (சில சமயம் மனித உடலோடு)  எதற்காக நம் முன்னோர் இணைத்திருக்கிறார்கள்? இது எல்லோருக்கும் வரும் சந்தேகமே... இதற்கு நான் எழுத்தாளர் திரு. பாலகுமாரனின் கருத்தை கொண்டு இங்கு பதிகிறேன்.
          பொதுவாக நம் மூச்சை கவனித்தால், நாம் கோபப்படும்போது, கவலைப்படும்போது,  காம வசப்படும்போது, வெறுப்படையும்போது என negative விஷயங்களில் ஈடுபடும்போது மூச்சு கீழ்நோக்கி வேகமாக பாயும். இதை தான் அதோகதி என்பார்கள். (அதோ=கீழ்நோக்கி ; கதி = பாய்தல்) உங்கள் காமம், கோபம், குரோதத்தை அக்கணம் கட்டுப்படுத்த நினைத்தால் உடனே நீங்கள் உங்கள் மூச்சை சிறிது சிறிதாக மேல்நோக்கி முடிந்தவரை இழுத்துப்பாருங்கள். உங்கள் மனம் மாற்றமடையும். எனவே எப்போதும் நம்மை நம் மூச்சு நல்லவிதமாகவோ, கெட்ட விதமாகவோ கட்டுப்படுத்துகிறது. எனவே நாம் நம் மூச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு ஞாபகப்படுத்த தான் யானை முகம் கொண்ட விநாயகர்.

            அவ்வளவு பெரிய தும்பிக்கையின் மூலமாக மூச்சை இழுக்க நேரமாகுமல்லவா? அது போல நாமும் நம் மூச்சை நிதானமாக நீளமாக இழுக்க வேண்டும். அதன் மூலம் பிராண சக்தி நம் உடல் முழுதும் பரவி உடலும் மனமும் நல்ல நிலையில் இருக்கும். மேலும் .நான் என் கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக இவர் தன் கையிலேயே அங்குசமும் வைத்திருப்பார். நம்மில் எத்தனை பேர் நம் மனதை கட்டுப்படுத்த முடிகிறது? So, நம் மூச்சை கட்டுப்படுத்தினால், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை புரியவைக்க நம் முன்னோர் அமைத்த உருவமே விநாயகர்.(நன்றி: பாலகுமாரன் - முதிர்கன்னி நாவல் )
   
           அடுத்து, மனம் என்பதை ஒரு குரங்குக்கு ஒப்பிடுவார்கள். நாம் நம் கண்ணை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தாலே, மனக்குரங்கு பல திசைகளிலும் தாவி ஓடும். கண்டதையும் கையிலெடுத்து அக்கு அக்காக பிரித்து போடும். ஆனால் அனுமனின் உருவத்தை நாம் பார்த்தால் பெரும்பாலும் அது தியானம் செய்யும் நிலையிலேயே இருக்கும்.

                இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு குரங்கு, நிலையில்லாமல்  ஆட்டமாட கூடிய ஒரு விலங்கு, தன்னை கட்டுப்படுத்தி, தியானம் செய்கிறது. மனிதனான உன்னால் முடியாதா என நம்மை தூண்டி விட அந்த உருவத்தை கொடுத்திருக்கிறார்கள். மேலும், அனுமனின் தந்தையாக வாயுவை கூறுவதன் காரணம், வாயுவின் கவனிப்பால் குரங்கு உருவில் உள்ள அனுமன் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முடிகிறது. அதுபோல, மூச்சை கவனித்தால் நாமும் மனம், உடலை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும் என்பதை உணர்த்துகிறார்கள்.(நன்றி: பாலகுமாரன் - உச்சித்திலகம் நாவல் )

          அதுபோல வராக உருவம். பன்றி எப்படி தனக்கு வேண்டிய உணவாகிய கிழங்கை (நான் அந்த காலத்து பன்றிய சொல்றேங்க)   பூமிக்குள் மறைந்து இருந்தாலும் தன் முயற்சியால் அகழ்ந்து எடுக்கிறதோ அது போல நாமும் நம் மனதின் உள்ளே இருக்கும் கடவுளை, ஞான ஒளியை தேட வேண்டும் என்பதற்காக அந்த உருவத்தையும் கும்பிடுகிறோம்.

             இப்படி நான் படித்த, கேட்ட, பார்த்த விஷயங்கள் மூலமாக எனக்கு சில விளக்கங்கள் கிடைத்தது. அதில் மூச்சுப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.  நீங்களும் உங்களுக்கு தெரிந்த உருவங்களை உங்களுக்கு கிடைக்கும் விளக்கங்களோடு பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள். கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். (இதை நாத்திகர் ஆத்திகர் வித்யாசமில்லாமல் பகிரலாம் தான். ஆனா என்ன பண்றது? பெரும்பாலும் ஆரோக்யமான விவாதமாக இருப்பதில்லை. அதனால் தான் சாமி கும்பிடறவங்க மட்டும்னு குறிப்பிட்டேன். யாரேனும் மனம் வருந்தினால் மன்னிக்கவும். உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இதோட கடவுள் சம்பந்தமான விஷயத்தை நான் எழுதறத விட்டுடலாம்னு இருக்கேன். (முடியல... எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது...))

பின்குறிப்பு: நான் ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக ஆகாத நிலையில் என் பக்கம் 1600 முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்த்த அனைவருக்கும் நன்றி. follower ஆனவங்களுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். HAPPY! :-)

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

      

Monday, November 8, 2010

ஆத்திகத்திற்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவு

               என் சென்ற பதிவு என் blog ஐ பிரபலபடுத்திய அளவு என் மற்ற பதிவுகள் செய்யவில்லை. நான் எடுத்துக்கொண்ட விஷயம் அவ்வளவு sensitive ஆனது என்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். இந்த அளவு கருத்து யுத்தம் நடக்கும் என நினைக்கவில்லை. நான் அந்த பதிவுக்கு முன் வரை நாம் தனிநபர் தாக்குதல், அரசியல் போன்ற விஷயங்கள்  தவிர எதை வேணுமானாலும் எழுதலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். கடவுள் விஷயமும் கவனமாக கையாள வேண்டிய ஒன்று என்பதை புரிந்துகொண்டேன்.

                  நான் அந்த தலைப்பை எடுத்துக்கொண்டது, இந்துக்கள் தங்கள் வழிபாட்டு முறையில் உள்ள விஷயங்களுக்கு, நான் படித்து, கேட்டு, பார்த்து அறிந்து கொண்ட வேறு விதமான dimension ல் கூறப்பட்ட விளக்கங்களை பகிர்ந்து கொள்ளவே. தெக்கிகாட்டான் அவர்கள் குறிப்பிட்ட 'http://dharumi.weblogs.us/2005/09/15/66' எனும் ப்ளாக் உண்மையிலேயே அவர் எப்படி நாத்திகன் ஆனார் என்பதை பண்பட்ட முறையில் விளக்கியுள்ளார். அவர் அளவு தெளிவு என் பதிவில் இல்லாமல் போகலாம். நான் பதிவுலகிற்கு புதியவள், சிறியவள் அல்லவா... எனவே அந்த குறைக்கு மன்னிக்கவும். ஆனால், எனக்கு பதிலாக பல பதிவுலக அன்பர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

       தெளிவாக எங்கே விளக்கி இருக்கிறார்கள்? குழப்பி இருக்கிறார்கள் என்று நாத்திக நண்பர்கள் சொல்லக்கூடும். நான் நாத்திகர்களை பொதுவாக கண்டுகொள்வதில்லை. இவர்கள் மூடநம்பிக்கையையும் கடவுள் தன்மையையும் குழப்பிக்கொண்டு கடவுள் இல்லை என்பார்கள். மேலும் அவர்களுக்கு பகுத்தறிவுக்கு பதிலாக சந்தேகக்கண் தான் இருக்கும். நான் அடுத்து குறிப்பிடும் ஒரு விஷயம் முகம் சுளிக்க வைக்கலாம். எனவே மன்னியுங்கள்.

             ஒரு நாத்திகனிடம் ஒரு குழந்தையின்  அப்பா இவர்தான் என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கு அந்த பெற்றோரின் கல்யாண பத்திரிக்கையை காட்ட வேண்டும், போட்டோ ஆல்பத்தை காட்ட வேண்டும், கல்யாண வீடியோவை காட்ட வேண்டும். இவை இருந்தால் பத்தாது. அவர்களுக்கு இன்னும் விளக்க வேண்டும். டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து காட்டினால் கூட அவர்கள்  நம்ப மாட்டார்கள். டாக்டர், கம்பவுண்டரிடம் காசு கொடுத்து ரிசல்டை மாற்றியதாக சொல்வார்கள். நாத்திகர்களின் கூற்று எப்படிப்பட்டது என்பதற்கு இது உதாரணம். எனவே நான் இவர்களிடம் கடவுள் தன்மையை விளக்க முயற்சிப்பது கிடையாது.

           நான் ஒரு அறை வாங்கினாலோ, முத்தம் வாங்கினாலோ அது எப்படி இருக்கும் என்பதை நான் மட்டுமே உணர்வேன். அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முயற்சிப்பதே அபத்தம். அது போல தான் கடவுள் தன்மையும். 

             கடவுளை அறிய ஒரே ஒரு வழி தான் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அது சரணாகதி தத்துவம். கடவுளை அடையும் வரை நல்லது கெட்டது என்ன  நேர்ந்தாலும் கடவுளை அடையாமல் விடமாட்டேன், எது நடந்தாலும் உன் பொறுப்பு என்பதே அது. கடலை  தாண்ட வேண்டும் என்றால்  முழுவதும் கடக்கும் வரை பொறுமை வேண்டும். பாதி வழியில் திரும்பியவர்களே இங்கு அதிகம். எனவே தான் இது போன்ற விமர்சனங்கள் இந்து மதத்தில் அதிகம்.

கடவுளும் மின்சாரமும் ஒன்றா?
           மின்சாரம் என்பது கண்ணுக்கு தெரிவதில்லை. அதனுடன் எது தொடர்பு கொள்கிறதோ, எது தன்னை மின்சாரத்துடன் தொடர்பு கொள்ளும் விதமாக தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அது மட்டுமே மின்சாரத்தின் பயனை அடைகிறது. உதாரணமாக மரக்கட்டையாக இருக்கும்போது பயன்பெறாதது நிலக்கரியாக மாறிய பின் பயன் பெறுகிறது. அதனால் தான் கடவுளை பற்றி அறிய பொறுமை முக்கியம் என்றேன்.
     
       நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள். இல்லை என்ற ஒன்றை பற்றி இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒரு அறையில் பூனை இருக்கிறது என்று சொன்னால், சொன்னவர்கள்  தான் பூனையை பிடிக்க வேண்டும். பூனை இல்லை என்பவர்கள் அந்த அறைக்கே போக தேவை இல்லை. நாங்கள், ஆத்திகர்கள், கடவுள் இருக்கிறார் என்பவர்கள், தோண்டி துருவி பார்த்து பிறகு தெரிந்து கொள்கிறோமே.

              ஒரு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது கூட பின்னால் ஒருவர் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று நம்புகிறோம். இவ்வளவு நீளமான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள கடவுள் உதவுகிறார் என்பதில் நம்பிக்கை வைக்ககூடாதா? கடவுள் என்பது ஒரு நம்பிக்கையாகவே இருக்கட்டுமே. . எங்கள் நம்பிக்கையை வீணாக்குவதில் உங்களுக்கு என்ன சந்தோஷம்?

       ஆத்திகர்கள்  முன்பு  குறிப்பிட்ட குழந்தையின் தந்தை குறிப்பிட்டவர்தான் என்கிறோம். எனவே  எல்லோர் மனத்திலும் தெளிவு இருக்கும். நாத்திகர்கள் 'அவர் இல்லை' என்கிறீர்கள். குழப்பம் தான். சந்தேகம் தான். குடி கெட்டது தான்.

      இன்னொரு விஷயம், நான் நாத்திக வாதத்தை எப்போது கேட்டாலும் ஒரு விஷயம் அங்கு உறுதியாக இருக்கும்.  கடவுளை நம்புகிறவர்கள் காயப்படுத்தாமல் எப்படி சொல்வது என்று பேசுவார்கள். கண்டிப்பாக விதி விலக்குகள் உண்டு. ஒத்துக்கொள்கிறேன். அதே போல நாத்திகர்கள் தெளிவாக பேசுவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்களை காயப்படுத்துவார்கள், இதமான தன்மையுடம் பேசவே மாட்டார்கள். கனிவு இருக்கவே இருக்காது. ஒரே ஒரு விதிவிலக்கு 'தருமி' மட்டுமே.

என் சந்தேகம்:
            அணு தான் உலகில் தோன்றிய அனைத்துக்கும் மூலம் என்னும் கூற்று அறிவியல் கூறியது என்றால் முழு முதல் அணு எப்படி வந்தது? இதை உருவாகியது யார்? அது எப்படி தானே உருவாகி இருக்கும்? இந்த கேள்விக்கு உண்மையிலேயே விடை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். அறிவியல் அறிந்த பக்குவப்பட்ட நாத்திகவாதி விடை அளித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால், ஆத்திகவாதிகளின் விடை அனைவருக்கும் தெரியும் என்பதால் இதை நாத்திகரிடம் கேட்கிறேன்.

இதற்கு பின்னூட்டம் தருபவர்கள் தனிநபர் தாக்குதல் செய்யாமல், கோபம் இல்லாத தரமான வார்த்தைகளை உபயோகித்தால், நான் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன். ஏனென்றால், நீங்கள் ஆத்திகரோ நாத்திகரோ, என்னை பொறுத்தவரை நட்பு, சகோ, முக்கியமாக மனிதர். மனிதத்தை கொன்று தன் கருத்தை வளர்ப்பது  முக்கியம் என நினைப்பது  முட்டாள்தனமல்லவா...

பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு முன்கூட்டியே நன்றி..

Friday, November 5, 2010

நிஜமாவே இந்த உருவத்தில் தான் கடவுள் இருப்பாரா?

உருவ வழிபாடு ஏன் வந்தது?
        படைப்பு, நகைச்சுவை, கதை, புதிர், சினிமா, பொது  னு எல்லா Field யும் தொட்டாச்சு. ஆன்மீகத்துலயும் try பண்ணி பாக்கலாமே னு யோசிச்சதுல இந்த மேட்டர் தான் சிக்குச்சு. படிச்சுட்டு  சொல்லுங்க நான் Pass or Fail னு.
 
பெரும்பாலானவர்களுக்கு இந்த சந்தேகம் வரும். கடவுளுடைய உருவம் நிஜமாகவே இப்படி தான் இருக்குமா என்று. நான் படித்த பெரும்பாலான புத்தகங்களும், கடவுளை கண்டவர்களாக சொன்னவர்களும் கூறுவது ஒன்றை தான். கடவுள் ஜோதி வடிவம்,  ஒளி வடிவம், பிரகாசமானவர். செத்துப் பிழைத்தவர்களாக (உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி) எண்ணப்படுபவர்கள் கூறும் அனுபவங்களும் ஒன்று தான். அவர்களுடைய உடலை விட்டு உயிர் பிரிந்து மேலே சென்று ஒரு பேரோளியைத்தான் சந்திப்பதாக கூறி இருக்கிறார்கள்.

                 அப்படி இருக்க, எதற்காக நம் முன்னோர்கள் இப்படி வித விதமான கடவுள் உருவங்களை உருவாக்கினார்கள்? இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, அன்றே கண்டுபிடித்து வைத்த அன்றைய ஞானிகள் இந்த விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டிருக்கவா போகிறார்கள்? இதற்கெல்லாம் என்னால் முடிந்த வரை பதில் தர முயற்சி செய்கிறேன்.

இப்ப என் பெயர் சாதாரணமானவள் னு மட்டும் போட்டா, நீங்க என்னை, என் முகத்தை, என் குணத்தை எப்படி வேணாலும் கற்பனை பண்ணலாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகம் தோன்றலாம். ஆனா, இப்ப நான் வைச்சிருக்கற போட்டோ இருக்கே, அது என்னை பத்தி கொஞ்சமாச்சும் உங்க மனசுல சில அபிப்ராயங்கள ஏற்படுத்தி இருக்கும்.

உதாரணமா,
1 அதில் இருக்கும் முகம் போல நானும் சாந்தமா இருப்பேன்
2 இளமையா இருப்பேன்
3 மிருதுவா, அமைதியான குணமா இருப்பேன்
4 அதில் உபயோகித்திருக்கும் நீல நிறம் ஆழமான தன்மையை குறிப்பதால், என் கருத்துகளும் ஆழமாக இருக்கும்.
5 ரகசியதன்மையையும் கலந்து  இருக்கும்
6 ஒற்றை மரம் காணப்படுவதால் தனிமை விரும்பி
(என் Profile photo வ இப்ப ஒரு தடவை நல்லா பார்த்தீங்க தான :-) ) 
என எப்படி வேணும்னாலும் உங்களுக்கு தோன்றலாம்.

மேற்கூறியதில் ஒன்றாவது நீங்கள் என்னைப்பற்றி நினைத்திருப்பீர்கள்.  நான் இந்த குணங்கள் கொண்டவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் வைத்திருக்கும் படத்தின் மூலம் ஏதாவது விதத்தில் நான் உங்களுக்கு ஒரு message சொல்லி இருப்பேன்.

அதே போல இந்து மத ஞானிகளும் ஒரு இறை உருவத்தை, அதுவும் உருவமல்லாத ஒன்றை குறிப்பிட ஒரு உருவத்தை உருவாக்கினார்கள். எதுவும் இல்லாத ஒன்றை வழிபட வெற்று சுவற்றை நோக்கினால் சுவரில் உள்ள விரிசல் தெரியும். வானத்தை நோக்கினால் மேகம் தெரியும், கடலை நோக்கினால் அலை தெரியும். கண்ணை மூடினால் கண்டதெல்லாம் தெரியும். இப்படி அருவத்தை வழிபட முயற்சித்தால் நம் மனம் உருவத்தை நிர்மானித்துக்கொள்கிறதே என்று  'இதை பார்த்து கற்பனை செய்யும் மனதை குவிச்சுகோங்கடா' னு லிங்க உருவத்தை படைச்சாங்க.

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் எல்லாம் கிடைத்தாலும் அது அதுக்குன்னு தனி தனி பிரிவு, தனி தனி சூபர்வைசர்கள் இருப்பது போல, நம்ம ஆளுங்களுக்கு தனிதனி கவலைகளுக்கு தனிதனி சாமி தேவைபட்டாங்க. குழந்தை பிறப்புக்கு, ஆரோக்கியத்துக்கு, காசுக்கு, படிப்புக்கு, தைரியத்துக்கு, தொழிலுக்கு, காவலுக்கு, வீட்டுக்கு,  சாவுக்கு,  பாவ புண்ணியத்துக்கு என பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாத்துக்கும் தனி தனி சாமியை உருவாக்கி அவர்கள் கையில் அந்தந்த தேவைக்கேற்ப பொருட்களை சொருவி வச்சுட்டாங்க.

கான்செப்ட் என்னன்னா, நாம எது வேணும்னு நினைக்கறமோ, அதையே நினைச்சுட்டு இருந்தா, அந்த எண்ண அலைகள் மேலே இருக்கக்கூடிய காஸ்மிக் கதிர்களில் பதிவாகி அதை நடக்க வைக்குமாம். அப்படி நமக்கு வேணும்கற விஷயத்தை நாம் கும்பிடும் சாமியின் கைகளில் பார்க்கும்போது நமக்கு அது கிளிக் ஆகி விடுகிறது. ஸோ, நாம் திரும்ப திரும்ப பார்த்து, நம் எண்ண அலைகளை அனுப்ப வைக்கும் வேலை தான் இந்த உருவ வழிபாடு. (இந்த விஷயம் நாத்திகம் போல இருந்தாலும், நான் ஆத்திகவாதி என்பதால் 'அப்படி பதியப்பட்ட விஷயங்களை  நடக்க வைப்பது கடவுள்' என்றுதான் கூறுவேன். எனவே இதற்கு தனியாக பின்னூட்டம் இட வேண்டாம் :-)  )

இந்த மேட்டர் சாமி கைல இருக்கற விஷயங்களுக்கு ஓகே. ஆனால் சாமி முகங்கள் வித விதமான  மிருகங்களையும் சுமந்திருக்கிறதே அது எதற்காக?

நீங்கள் இடும் பின்னூட்டமும், ஓட்டும் தான் என் போன்ற புதிய பதிவர்களுக்கு ஊக்கி. இவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு யோசித்து (நம்புங்கப்பா..) டைப் செய்த இந்த விஷயங்களுக்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை பொறுத்து அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Tuesday, November 2, 2010

ஒரு தந்தையின் கவிதை

சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் பின்வரும் கவிதை வந்தது. ரத்தப்புற்று நோய் வந்த ஒரு ஜிம்பாப்வே சிறுமியின் தந்தை பாடுவதாக அமைந்திருந்தது. சற்றே பெரிய கவிதை தான். என்னால் முடிந்த அளவு தமிழ் படுத்தி இருக்கிறேன். இது நோயுற்ற சிறுமியின் தந்தை மட்டுமல்ல, இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  வேலை பளுவின் காரணமாக தங்கள் குழந்தையிடம் இழந்த விஷயங்களை பற்றி கூறுவதாக அமைகிறது. உங்களாலும் ரசிக்க முடியும் என நினைகிறேன்.

என் குழந்தைக்காக...
இந்த‌ காலையாவது
உன் முகத்தை பார்த்ததும்
புன்னகைக்கப்போகிறேன்

இந்த‌ காலையாவது
நீ எதை அணிய விரும்புகிறாயோ,
அதையே அணிய விட்டு,
'மிக அருமை' என்று புன்னகைக்கப் போகிறேன்

இந்த‌ காலையாவது
லாண்டரிக்கு போகும் வழியில்
உன்னை பார்க்கில் விளையாட விட்டு
கூட்டி வரப்போகிறேன்

இந்த‌ காலையாவது
எல்லா சமையல் பாத்திரங்களையும்
கழுவும் இடத்தில் போட்டுவிட்டு
விடுகதைகளை கண்டுபிடிப்பது எப்படி என
கற்றுத்தரப்போகிறேன்

இந்த மதியமாவது 
தொலைபேசியின் இணைப்பை துண்டித்து,
கணிணியையும் அணைத்துவிட்டு
கொல்லைப்புறத்தில் உன்னுடன் அமர்ந்து
சோப்புக்குமிழியை ஊத‌ப்போகிறேன்

இந்த மதியமாவது 
ஐஸ்வண்டியை பார்த்து அடம்பிடிக்கும் உன்னை,
கத்தி அடக்காமல் உனக்காக ஒரு ஐஸ் வாங்கி கொடுக்கப்போகிறேன்

இந்த மதியமாவது
நீ வளர்ந்ததும் என்ன ஆவாய் என்பது பற்றி 
கவலைபடாமலும், நீ விரும்பும் எதைபற்றியும்
மாற்றுக்கருத்து கூறாமலும் இருக்க போகிறேன்

இந்த மதியமாவது
நான் 'குக்கி' செய்யும்போது
உன்னை எனக்கு உதவ அனுமதிக்கபோகிறேன்

இந்த மதியமாவது
உன்னை 'Mc Donald's' க்கு கூட்டிச்சென்று
இரண்டு பொம்மைகள் வாங்கி தரப்போகிறேன்

இந்த மாலையாவது
உன்னை என் கைக்குள் இறுக்கிக்கொண்டு
நீ எப்படி பிறந்தாய் மற்றும்
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று
கதையாய்  சொல்லப்போகிறேன்

இந்த மாலையாவது நீ
தண்ணீர் தொட்டியில் குதிப்பதற்கு
கோபப்படாமல் இருக்கப் போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
என்னுடன் உன்னை விழித்திருக்க அனுமதித்து
எல்லா நட்சத்திரங்களையும் எண்ண
அனுமதிக்கப்போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை துறந்து
உனக்கு அருகில் மணிக்கணக்காக படுத்து
உனக்கு கதகதப்பினை கொடுக்க போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
நீ பிரார்த்தனை செய்யும்போது
உன் முடியினை கோதியவாறு,
உன் போன்ற மிகப்பெரிய பரிசை கொடுத்ததற்காக
கடவுளிடம் நன்றி சொல்லிக்கொடிருக்கப்போகிறேன்

மேலும், இன்று குட்நைட் சொல்லி முத்தமிடும்போது
உன்னை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக,
இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கட்டிகொண்டிருக்கப்போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
தங்களது தொலைந்து போன குழந்தைகளை தேடும்
அம்மா அப்பாக்களை பற்றியும்
தங்கள் குழந்தைகளை படுக்கை அறையில் பார்ப்பதற்கு  பதிலாக
சுடுகாடுகளில் போய் பார்க்கும் அம்மா அப்பாக்களை பற்றியும்
மருத்துவமனை அறைகளில் 
நோயால் அவதிப்படும்  தங்கள் குழந்தைகளை 
கவனித்துக்கொண்டிருக்கும் அம்மா அப்பாக்களை பற்றியும்
நினைத்துக் கொண்டிருக்கப்போகிறேன்

அதன் பின் கடவுளிடம் உனக்காக
நன்றி சொல்லி கேட்கப்போகிறேன்
'வேறெதுவும் வேண்டாம்...
இன்னும் ஒரு நாள் மட்டும் கொடு' என்று...

                குழந்தைகள் எவ்வளவு பெரிய பரிசு! அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோக்கில்,  நாம் நமக்கு எது தேவையோ அவற்றை அவர்கள் மீது திணிக்கிறோம், நமக்கு எது வேண்டுமோ அதை அவர்களுக்காக சேர்க்கிறோம். முட்டாள் தனமாக இல்லை? உண்மையில் அவர்களின் எதிர்பார்ப்பு அரண்மனை போன்ற வீடு, கார், என பெரிய செலவு வைக்கும் விஷயங்கள் அல்ல. மிக மிக சாதாரணமானவையே.  நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசித்தால், அவர்களுக்காக ஏதேனும் செய்ய நினைத்தால்  செய்ய வேண்டியது, அவர்களுக்கு பிடித்ததைத்தான். உங்களுக்கு பிடித்ததை அல்ல.
 
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி!