Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, October 28, 2010

நண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை?

இந்த முறை எழுதப்போவது உலக இணைய வரலாற்றில் முதல் முறையாக ஒரு அற்புதமான காதல் கதையை பற்றி.. இதை சினிமாகாரர்கள் படமாக எடுத்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். உண்மையிலேயே நண்பனின் காதலுக்கு மரியாதை கொடுத்த ஒரு அருமையான மனிதனை பற்றி தான் கூறுகிறேன்.

எங்கள் வீட்டினருகில் சந்தோஷ் என்ற பெயரில் ஒரு பையன். அப்பா கிடையாது. அம்மாவின் வளர்ப்பு. மெக்கானிக்காகவோ, என்னவோ வேலைக்கு போய்க்கொண்டிருந்தான். நண்பர்கள் வட்டம் பெரியது. அதில் ஒரு நண்பனுக்கு காதல் நோய் வந்தது இவன் துரதிர்ஷ்டம்.....

(இந்த பாராவில் வரும் 'எல்லா' என்ற வார்த்தைக்கு முன் 'சினிமாவில் வருவதை போல' என்ற வரியை சேர்த்துக்கொள்ளவும் ) எல்லா நண்பர்களை போலவே இவனும் நண்பனின் காதலுக்கு எல்லா உதவியும் செய்து வந்திருக்கிறான். காதல் ஜோடியும் வானில் சிறகடித்து பறந்திருக்கிறது. எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த நேரத்தில் எல்லா பெற்றோரையும் போல பெண்ணின் பெற்றோரும் விஷயம் தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடுகளை துரிதமாக செய்து விட்டனர். எல்லா காதலியையும் போல 'கட்டினா அவனைத்தான் கட்டுவேன்' என்று இந்த பெண் உறுதியாக இருக்க, எல்லா காதலனையும் போல பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ண காதலனும் தயாராக, புதியதோர் திட்டம் தயாரானது.

அதன்படி, நிச்சயதார்த்த நாள் அன்று காலையில் நண்பர்கள் கட்டம் கட்டி பெண்ணை தூக்கி விட்டார்கள். ரெஜிஸ்டர் ஆபிசில் காதலனையும் காதலியையும் கணவன் மனைவியாக ஆக ப்ரமோஷன் கொடுக்க  நண்பர்கள் தயாராக இருந்தார்கள். பெண் வீட்டாரோ 'எவனா இருந்தாலும் வெட்டுவேன்' ரேஞ்சுக்கு இவர்களை தேடிக்கொண்டிருந்தார்கள். ரெஜிஸ்திரார், தாலி, மாலை, கல்யாண பெண் அனைவரும் ரெடி. ஒரே ஒரு சின்ன பிரச்சனை. மாப்பிள்ளை வரவில்லை. நேரமோ நெருங்க, பெண்வீட்டாரோ கொலைவெறியில் தேட,  பெண்ணோ பதற, நண்பர்களுக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தான் நம் சந்தோஷின் வாழ்வில் முக்கிய திருப்பம் வந்தது. பெண்வீட்டார் பெண்ணை பிடித்துச் சென்றுவிட்டால் தன் நண்பனின் காதலி வேறொருவருக்கு மனைவி ஆகிவிடும் சூழ்நிலை சந்தோஷின் மனதில் பெரும் புயலை ஏற்படுத்தியது. எனவே நண்பனின் காதலியை அவள் பெற்றோரிடமிருந்து காப்பாற்ற அவன் ஒரு முடிவு எடுத்தான் பாருங்க....
...........
...........
............
............
அவனே அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான். (இந்த இடத்தில் பாயும் கடலலை, பறக்கும் பறவைகள், ஆடும் தென்னைமரம் எல்லாம் அப்டியே freeze ஆகி நிக்கணும்).
அதன் பின் சந்தோஷும், சந்தோஷின் மனைவியும்  அவன் நண்பர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். (ஜகஜம் ஜகஜம் ஜகஜகஜம்ஜம் background music) வீட்டில் அம்மாவிடம் விஷயத்தை சொல்லி அம்மாவையும் கூட்டிக்கொண்டு வேறு எங்கோ சென்று விட்டார்கள். அடுத்த நாள் செய்திதாளில் 'பெண்ணை கடத்திய வாலிபர்' என்று செய்தி வேறு. சரி, விஷயம் இதோடு முடிந்தது என்று இருந்தால், நாடோடிகள் போலவே அதன் பின் தான் சில பல ட்விஸ்டுகள்.  என்ன என்று கேட்கிறீர்களா?

சந்தோஷ் இருக்கும் இடம் பற்றிய விவரத்தை எப்படியோ தெரிந்துகொண்டு (எவனோ போட்டு குடுத்துட்டானாம்) பெண் வீட்டார் பின்னாடியே சென்று சந்தோஷை வெளுவெளு என்று வெளுத்து, அன்றே பெண்ணை தங்களுடன் கூட்டி சென்றுவிட்டார்கள். கூடவே, வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் முடிந்தது. சந்தோஷின் நண்பன் அந்த பெண்ணை மறந்துவிட்டு  வெளியூரிலேயே வேலைபார்த்து செட்டில் ஆகி விட்டான். பெண்வீட்டாரின் பின்புலம் பெண்ணை கடத்திய பிறகுதான் தெரிந்திருக்கிறது இவனுக்கு. அதனால் தான் கல்யாணத்தன்று பார்ட்டி எஸ்கேப்.  இப்ப நம்ம சந்தோஷ் என்ன ஆனான்னு தான கேக்கறீங்க? போன வாரம் என் தம்பி பார்த்தாக சொன்னான்.. டீக்கடையில் சந்தோஷ் தன் நண்பர்களுடன் டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு பையன் அவனிடம் சொன்னானாம் 'மச்சி.... அந்த பொண்ணு உன்னையே பாக்குது டா...'
CONCLUSION: சொல்ல மறந்த காதல் கதை :-)

மேற்கூறிய அனைத்து சம்பவங்களும் உண்மை. இந்த காலத்தில் நண்பனின் காதலுக்காக எந்த அளவு பசங்க இறங்கறாங்க என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். இந்த விஷயத்தை கேள்வி பட்டதும் எனக்கு ஒன்றே ஒன்று தான் தோன்றியது. உக்காந்து யோசிப்பாய்ங்களோ....

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி !

Tuesday, October 26, 2010

கடவுளாக ஜிம் கேரி

நேற்று தான் நான் BRUCE ALMIGHTY படம் பார்த்தேன். ஏற்கனவே வந்த EVAN ALMIGHTY யின் வெற்றியை தொடர்ந்து இப்போது இந்த படம். கான்செப்ட் ஒன்று தான். இந்த உலகம் இப்படி இருக்கே, எனக்கு மட்டும் இப்படி நடக்குதே, நான் மட்டும் கடவுளா இருந்தேன்னு வச்சுக்க.... இப்படி எல்லாம் ஹீரோ கடவுளை திட்ட, கடவுள் 'இருந்து பாரு டா மவனே' னு தன் சக்திகளை கொடுத்து விடுகிறார். அதன் பிறகு நடப்பவை மீதி கதை.
என் hot favorite hero ஜிம் கேரியின் படம் என்பதால் மிகவும் ரசிக்க முடிந்தது. Body language மற்றும் facial expressions க்கு   யார் பெஸ்ட் என கேட்டால் என் ஓட்டு ஜிம் கேரிக்கே. வசனங்களும் ரசிக்க கூடியதாக இருந்தது. ஒரு காட்சியில் ப்ருசின் மனைவி ப்ரூசை பார்த்ததும் "Oh my God!" என்கிறாள். உடனே ப்ரூஸ் "என்னை ப்ரூஸ் என்றே கூப்பிடு டார்லிங்" என்கிறான். இன்னொரு காட்சியில் ஒரு பிச்சைகாரன் "are you blind?" (கண்ணிருந்தால் பிச்சை போடுங்கள் என்ற அர்த்தத்தில் ) எழுதி வைத்திருக்கிறான். உடனே ப்ரூஸ் "No, I am late" என்றவாறு ஓடுகிறான். இன்னும் நிறைய சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை கொஞ்சம் கூட வெட்கமே படாம என்ஜாய் பண்ணி நடித்து எல்லா தரப்பு பார்வையாளர்களையும்  மகிழ்விக்கும் நடிகர்கள் ஹாலிவுட்டில் இரண்டு பேர். ஒன்று ஜிம் கேரி. இரண்டாவது நம்ம மிஸ்டர் பீன் (ரோவன் அட்கின்சன்)

சமீபத்தில் எனக்கு வந்த எஸ் எம் எஸ் இல் மிஸ்டர் பீன் பில்கேட்ஸிடம் மூன்று கேள்விகள் கேட்கிறார்

1 கீபோர்டில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் மாறி மாறி உள்ளன. எப்போது நீங்கள் சரி செய்த வெர்ஷனை வெளியிடுவீர்கள்?
2 ஸ்டார்ட் பட்டன் இருப்பது போல ஏன் ஸ்டாப் பட்டன் இல்லை?
3 நாங்கள் இப்போது எம்எஸ் வோர்ட் (MS Word) கற்றுக்கொண்டு விட்டோம். எப்போது எம் எஸ் செண்டன்ஸ் (MS Sentence) வெளியிடுவீர்கள்?
4 கடைசியாக ஒரு பர்சனல் கேள்வி. உங்கள் பெயரில் gate ஐ வைத்துக்கொண்டு நீங்கள் ஏன் windows ஐ வெளியிட்டீர்கள்?
நல்லா இருக்குல ...

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி

Friday, October 22, 2010

மானாட மயிலாட சீசன் 5 ஜெயித்தது யார்?

விஷயம் தெரியுமா..... மானாட மயிலாட 5 ன் டைட்டில் வின்னர்கள் பாலாவும் ஸ்வேதாவும்...
இரண்டாம் பரிசு ரெஹ்மான் - ஷிவானி.
மூன்றாம் பரிசு கிரண் - லீலாவதி .
நான்காம் பரிசு (ஆறுதல் பரிசு) பயாஸ் - வர்ஷா.

எனக்கு அசாரின் நடனம் தான் பிடிக்கும். ஆனால் தலைவர் செமி பைனல்ஸில் வெளியேறி விட்டதால் இந்த முறை டைட்டில் வின்னர் பற்றி டென்ஷன் இல்லாமல் நிதானமாக காத்துக்கொண்டிருந்தேன். .

ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் முதல் பரிசு ஜெயித்தவரை அதே நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்து மீண்டும் முதல் பரிசு தருவதை உலக தொலைகாட்சியில் கலைஞர் டிவி தான் செய்கிறது. பாலாவுக்கு ஒரே ஒரு அட்வைஸ்... இனி மானாட மயிலாட சீசன் 6,7,8,9,10 என எதில் கலந்து கொண்டாலும் சண்டைகாட்சி செய்து காண்பிப்பதை குறைத்துக்கொண்டு டான்ஸ் ஆடி காட்டுங்க சார். ஏன்னா, ரெஹ்மான், லீலா, வர்ஷா எல்லோரும் நல்லா ஆடினாலும் உங்களை போல ஸ்டன்ட் செய்யாததால் உங்களுக்கு அடுத்தடுத்த இடங்களுக்கு போய் விட்டார்கள். நீங்கள் ஒரு அருமையான டான்சராக இருந்தாலும் இந்த சமயத்தில் உங்கள் நடனம் பேசப்படவில்லை. இது ஒரு நல்ல டான்சருக்கு அழகல்ல. ஓகே நீங்கள் ஹீரோ. ஆனால் உங்கள் ஹீரோயிசத்தை காட்டும் இடம் இது அல்ல. இது நடன திறமையை காடும் இடம் அல்லவா.  Any way, CONGRATS TO BALA AND SWETHA!  

நண்பர்களே... இதற்காக எனக்கு பாலா ஸ்வேதா சாண்டி பிடிக்காது என அர்த்தம் அல்ல. அருமையான டீம். கஷ்டப்பட்டதன் பலனை அடைந்தார்கள்.வாழ்த்துக்கள்!
 

இப்பவே கண்ணை கட்டுதே...

ஸ்ஸ்ஸ்.... ஊர்ல மெசேஜ் அனுப்பறவன், சாட் பண்றவன், ஈமெயில் அனுப்பறவன், ட்வீட் பண்றவன் எல்லாம் நல்லா தான் இருக்காங்க. ஒரே ஒரு BLOG அ வைச்சுட்டு நான் படற பாடு இருக்கே.....
        
             என்னங்க பண்றது... எல்லாரும் புதிர் போடறாங்களே னு நானும் போட்டா சேலம் ரமேஷ் வந்து என்னங்க விடை வெளிப்படையா தெரியுது னு திட்டறாரு. 'எனக்கு அந்த செட்டிங் எல்லாம் தெரியாதுப்பா' னு அசின் கணக்கா சரண்டர் ஆக வேண்டி இருக்கு. ஏங்க... இதுக்கெல்லாம் guide கிடைக்காதா?


             இந்த நாள்.... உங்க மொபைல் ல reminder போட்டு வைச்சுகோங்க... நானும் உங்கள விட அதிகமா ப்ளாக் எழுதி, என்னை மாதிரி புதுசா வரவங்க 'எங்கே சாதாரணமானவள்  blog... எங்கே சாதாரணமானவள்  blog...' னு தேடி அவங்க ப்ளாக் போட என்னென்ன டிப்ஸ் குடுக்க முடியுமோ அதெல்லாம் குடுக்கல.... (அய்யய்யோ....இதுக்கு மேல எப்படி பில்ட் அப் குடுக்கறது னு தெரியலையே...) நான் சாதாரணமானவள் இல்ல... (உங்க மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்... அதேதான்) :-)


               ஓகே .... இப்ப மேட்டருக்கு வரேன்... எப்டிங்க மத்தவங்க கமெண்ட்ஸ மறைக்கவும்  , மத்தவங்கள கமெண்ட் கொடுக்க முடியற மாதிரியும்  செட் பண்றது? மேற்கொண்டு வேறு ஏதேனும் சந்தேகம் வந்தால் எந்த ப்ளோகில் தேடலாம்? புதிய பதிவர்களுக்கும் வழி காட்டுங்களேன்...

Thursday, October 21, 2010

புதிர்... புதிர்... புதிர்....(வலைபதிவை பிரபலமாகும் முயற்சி)

நம்ம வலைபதிவை கொஞ்சம் பிரபலபடுத்த புதிர் போடுவது நல்ல வழியாக தோன்றுகிறது. புது பதிவர்கள் இம்முறையை முயற்சிக்கலாம். இதோ என் முறை.


1 . ஒரு கிளி யானையின் மேல் உட்கார்ந்ததால் யானை செத்துப்போய் விட்டது. இது எப்போது  சாத்தியம் ஆகும்?


2 . ஒரு பூக்கடையின் போர்டில் இப்படி எழுதி இருந்தது.
     சிவப்பு ரோஜா ரூ 10 , வெள்ளை ரோஜா ரூ 8 , மஞ்சள் ரோஜா ரூ 6 என.
ஒரு பொண்ணு வந்து 10 ரூபாய் கொடுத்து ரோஜா வேண்டும் என கேட்டாள். எது வேணும் னு கேட்டு அவள் கேட்ட சிவப்பு ரோஜாவை கடைகாரர் கொடுத்தார். அடுத்து ஒரு பொண்ணு வந்து 10 ரூபாய் கொடுத்து ரோஜா வேண்டும் என கேட்டாள். அதற்கு அவர் எந்த கேள்வியையும் கேட்காமல் அவராகவே ஒரு சிகப்பு ரோஜாவை கொடுத்துவிட்டார். எப்படி?


 3 . COW என்பதை 13 வார்த்தைகளில் எப்படி உச்சரிப்பீர்கள்?


4 . ஆறு ஆப்பிள்களை ஒன்பது பேருக்கு எப்படி சமமாக பகிர்ந்தளிப்பீர்கள்?

எல்லாரையும் போலவே ஒரு நாள் கழித்து இதற்கு விடை சொல்கிறேன் என்று முதலில் சொல்லி இருந்தேன். ஆனால்  என் settings தவறு காரணமாக நண்பர்கள் விடை தர முடியவில்லை. எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு காலத்தை நீட்டித்து சனிக்கிழமை மாலை விடை பதிவு செய்கிறேன்.
விடை தெரிந்தவர்கள் பதிலளிக்க முயன்று பாருங்கள். விடை தெரியாதவர்கள் எனக்கு நண்பர்கள் ஆகி பாருங்கள் :-)

Tuesday, October 19, 2010

முதலாளியாய் இருப்பது கேவலம். தொழிலாளியாய் இருப்பது பெருமை. எங்கே?

என் நெருங்கிய நண்பர் இன்போசியன் ஆகி விட்டார். புரியவில்லையா? இந்தியாவில் இருப்பவர் இந்தியன். அதுபோல இன்போசிஸ் இல் வேலை செய்பவர் இன்போசியன். தற்போதய கார்பொரேட் உலகம் இன்னும் என்னென்ன வார்த்தைகளை அறிமுகப்படுத்தப்போகிறதோ! நன்று...  என் நண்பர் ஒரு தமிழக மாநகராட்சியிலே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்தவர். நல்ல வருமானம் உள்ள நிலையில், 'இன்போசிஸ்' என்ற மந்திரச்சொல் அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் மயக்கி நண்பரின் தொழிலை இழுத்து மூட வைத்து விட்டு, 'ரிஸ்க்' இல்லாத வேலை என்று இன்போசிஸ் க்குள் நுழைய வைத்து விட்டது. எனக்கு புரியவில்லை. தனிக்காட்டு ராஜாவாக இருப்பதை விட கூட்டத்தில் வேலைகாரனாக இருப்பது எந்த விதத்தில் சிறந்தது? கௌரவமாக சொந்த தொழில் செய்பவருக்கு கிடைக்கும் மரியாதை விட அந்நியனுக்கு அடிமை வேலை பார்ப்பது அவ்வளவு பெருமையான விஷயமா?  இந்தியா வளர்கிறதா? இல்லை அடிமை தொழிலை வளர்க்கிறதா?  ஒண்ணுமே புரியலடா சாமி...

Thursday, October 7, 2010

பிரபுதேவா என்ன செய்வார்?

ஒரு நண்பர் தன் ப்ளாக் இல் எழுதி இருந்தார், இதற்கு முன் சரத்குமார், கமலஹாசன், பிரகாஷ் ராஜ்  மற்றும் பலர் மறுமணம் செய்து கொள்ளவில்லையா என்று. இவர்கள் அனைவரும் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு பின்பு தான் மறுமணமோ அல்லது இணைந்து வாழ்தலையோ (Living Together) செய்தார்கள். ஆனால் பிரபுதேவா விஷயம் அப்படி அல்ல. முறைப்படி விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறார். மேலும் இந்திய அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே அவரது விஷயம் கண்டிப்பாக மீடியாக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. தங்கள்  உறவை இப்படி வெட்கமில்லாமல் வெளிக்காட்டும் பிரபுதேவா நயன்தாரா ஜோடி , ஒருவேளை ரம்லத் சிம்புவுடன் (ஒரு சகோதரனாக நினைத்து) சுற்றினால் சும்மா இருப்பார்களா? நயன்தாராவை விடுங்கள்... அவருக்கு பிரபு இல்லாவிட்டால் கார்த்திக்.. ஆனால் பிரபுதேவா? தன் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்?

வந்துட்டோம்ல....

இதோ நானும் ப்ளாக் எழுத வந்துட்டேன். ப்ளாக் எழுத சொல்லி குடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி. நாட்டுல நடக்குற ஒவ்வொரு விஷயத்த பத்தி கமெண்ட் குடுக்க நமக்கும் பர பரன்னு இருக்கும். அதை வெளிப்படுத்த வழி தெரியாம இருந்துச்சு. இப்ப தெரிஞ்சுடுச்சு. தாமதமாக வந்தாலும் தரமாக வரவே விரும்புகிறேன். இந்த blog இன் தரத்தை உயர்த்த நீங்களும் வழிகாட்டலாம்.